கண்டி - வத்தேகம நகரில், நான்கு வயது சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்ற பெண் ஒருவர், அந்த சிறுமியை நடுவழியில் விட்டுச் சென்றுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
வத்தேகம நகருக்கு நேற்று காலை சுமார் 7.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் சென்ற பெண் ஒருவர், உடன் அழைத்து வந்த நான்கு வயது சிறுமியை அங்கேயே இறக்கிவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறுமி தனியாக நிற்பதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள், உடனடியாக வத்தேகம காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துச் சிறுமியைப் பாதுகாப்பாகக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து குறித்த சிறுமி கண்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட சிறுமி தமிழ் மொழியில் பேசுகின்ற நிலையில், அவரால், பெற்றோரின் விபரங்களையோ அல்லது தான் வசிக்கும் இடத்தையோ தெளிவாகக் கூறமுடியவில்லை.
அதேநேரம், அவரை ஏற்றி வந்ததாக கூறப்படும் முச்சக்கர வண்டியின் பதிவு எண் தெளிவாகத் தெரியாத காரணத்தினால், வத்தேகம மற்றும் அதனைச் அண்மித்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமராக்களின் காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு அந்த முச்சக்கர வண்டியையும், சிறுமியை விட்டுச் சென்ற பெண்ணையும் அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வத்தேகம நகருக்கு நேற்று காலை சுமார் 7.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் சென்ற பெண் ஒருவர், உடன் அழைத்து வந்த நான்கு வயது சிறுமியை அங்கேயே இறக்கிவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறுமி தனியாக நிற்பதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள், உடனடியாக வத்தேகம காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துச் சிறுமியைப் பாதுகாப்பாகக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து குறித்த சிறுமி கண்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட சிறுமி தமிழ் மொழியில் பேசுகின்ற நிலையில், அவரால், பெற்றோரின் விபரங்களையோ அல்லது தான் வசிக்கும் இடத்தையோ தெளிவாகக் கூறமுடியவில்லை.
அதேநேரம், அவரை ஏற்றி வந்ததாக கூறப்படும் முச்சக்கர வண்டியின் பதிவு எண் தெளிவாகத் தெரியாத காரணத்தினால், வத்தேகம மற்றும் அதனைச் அண்மித்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமராக்களின் காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு அந்த முச்சக்கர வண்டியையும், சிறுமியை விட்டுச் சென்ற பெண்ணையும் அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Latest News
இந்திய உந்துருளிகளில் அதிக வேகத்தில் செல்லும் இளைஞர்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை
Local
14 August 2026
நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் தாயும் அவரது காதலனும் கைது
Local
14 August 2026
கீரியும்,பாம்புமாக செயற்படும் விஜய்யும் உதயநிதியும் -விவாதமாகும் மோதல் போக்கு
Local
14 August 2026
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
Local
14 August 2026
இலங்கைக்கான GSP வரிச் சலுகைக்கு ஐரோப்பிய ஒன்றியம் புதிய நிபந்தனைகள்
Local
14 August 2026
31 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இணையும் பிரபு மற்றும் சுகன்யா
Local
14 August 2026
10 வயதுச் சிறுமியிடம் முறைக்கேடாக நடந்துக்கொண்டதாக கூறப்படும் தந்தையும் தாத்தாவும் தலைமறைவு
Local
14 August 2026
மலேசியாவில் நடந்தது என்ன? - "கஞ்சிபானை இம்ரான்" விவகாரத்தில் வெளிவந்த உண்மை!
Local
14 August 2026
கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய இளைஞன், பெந்தோட்டை கடலில் மூழ்கி உயிரிழப்பு
Local
14 August 2026
கிழக்கு மாகாணத்திற்கான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படாமல் மோசடி!
Local
14 August 2026