கண்டி - வத்தேகம நகரில், நான்கு வயது சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்ற பெண் ஒருவர், அந்த சிறுமியை நடுவழியில் விட்டுச் சென்றுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
வத்தேகம நகருக்கு நேற்று காலை சுமார் 7.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் சென்ற பெண் ஒருவர், உடன் அழைத்து வந்த நான்கு வயது சிறுமியை அங்கேயே இறக்கிவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறுமி தனியாக நிற்பதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள், உடனடியாக வத்தேகம காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துச் சிறுமியைப் பாதுகாப்பாகக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து குறித்த சிறுமி கண்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட சிறுமி தமிழ் மொழியில் பேசுகின்ற நிலையில், அவரால், பெற்றோரின் விபரங்களையோ அல்லது தான் வசிக்கும் இடத்தையோ தெளிவாகக் கூறமுடியவில்லை.
அதேநேரம், அவரை ஏற்றி வந்ததாக கூறப்படும் முச்சக்கர வண்டியின் பதிவு எண் தெளிவாகத் தெரியாத காரணத்தினால், வத்தேகம மற்றும் அதனைச் அண்மித்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமராக்களின் காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு அந்த முச்சக்கர வண்டியையும், சிறுமியை விட்டுச் சென்ற பெண்ணையும் அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வத்தேகம நகருக்கு நேற்று காலை சுமார் 7.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் சென்ற பெண் ஒருவர், உடன் அழைத்து வந்த நான்கு வயது சிறுமியை அங்கேயே இறக்கிவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறுமி தனியாக நிற்பதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள், உடனடியாக வத்தேகம காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துச் சிறுமியைப் பாதுகாப்பாகக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து குறித்த சிறுமி கண்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட சிறுமி தமிழ் மொழியில் பேசுகின்ற நிலையில், அவரால், பெற்றோரின் விபரங்களையோ அல்லது தான் வசிக்கும் இடத்தையோ தெளிவாகக் கூறமுடியவில்லை.
அதேநேரம், அவரை ஏற்றி வந்ததாக கூறப்படும் முச்சக்கர வண்டியின் பதிவு எண் தெளிவாகத் தெரியாத காரணத்தினால், வத்தேகம மற்றும் அதனைச் அண்மித்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமராக்களின் காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு அந்த முச்சக்கர வண்டியையும், சிறுமியை விட்டுச் சென்ற பெண்ணையும் அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Latest News
வீட்டுக் காவல் திட்டம் இலங்கையில் சாத்தியமா? சுந்தரலிங்கம் பிரதீப் சொன்ன முக்கிய தகவல்!
Local
15 August 2026
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 38 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்!
Local
15 August 2026
“அரசியல்வாதிகளுக்கு பயம்!” – சிறைச்சாலை மோதல்கள் குறித்து பிரதீப் அதிரடி தகவல்
Local
15 August 2026
அரசாங்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது - எதிர்க்கட்சியினர் விரைவில் சிறை செல்வர்
Local
15 August 2026
அடுத்தடுத்து நடைபெற்ற கொடூரச் சம்பவங்கள் : மாணவர் ஒருவர் உட்பட மூவர் பலி, இருவர் கைது
Local
15 August 2026
இலங்கையில் 25,000க்கும் மேற்பட்டோர் அறுவை சிகிச்சைகளுக்காக காத்திருப்பு – சில சிகிச்சைகளுக்கு 2029 வரை காலக்கெடு
Local
15 August 2026
அங்குலான கடற்கரையில் இலங்கை கடற்படையின் டோரா படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் மாயம் - 11 பேர் மீட்பு!
Local
15 August 2026
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வு
Local
15 August 2026
சிறுவர் உழைப்பு தடுப்புச் சட்டத்தில் திருத்தம்: அபராதம் 1 இலட்சமாக அதிகரிப்பு!
Local
15 August 2026
இந்திய அணியை வழிநடத்துவது பெரும் கௌரவம் – 600ஆவது டெஸ்ட் போட்டி சிறப்பான தருணம் என சுப்மன் கில் தெரிவிப்பு
Local
15 August 2026