அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் போல இலங்கையில் ‘வீட்டுக் காவல்’ (House Arrest) முறையை உடனடியாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நாட்டினுடைய சட்ட நடைமுறைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பல வளர்ந்த நாடுகளிலும் குற்றவாளிகள் அல்லது சந்தேகநபர்களைச் சிறையில் அடைப்பதற்கு மாற்றாக வீட்டுக் காவலில் வைக்கும் நடைமுறை உள்ளது.
எனினும் இலங்கை முழுமையான வளர்ச்சியடைந்த நாடாக இல்லாததால், கண்காணிப்பு வசதிகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு சவால்கள் காரணமாக இத்தகைய திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த முடியாது.
ஒருவரை வீட்டுக் காவலில் வைக்கும்போது, அவரைப் பாதுகாப்பதற்கும் கண்காணிப்பதற்கும் பிரத்யேகப் பணியாளர்கள் தேவைப்படுவார்கள்.
இந்தநிலையில் உடனடியாகச் சாத்தியமில்லை என்றாலும், எதிர்காலத்தில் நாட்டின் சட்ட மற்றும் சிறைச்சாலைச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக நவீன மாற்று முறைகளை நோக்கி நகர்வது சிறந்த திட்டமாக அமையும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
Latest News
நயினாரின் கருத்தை கண்டித்துள்ளார் நடிகை குஷ்பு!
Local
16 August 2026
சினிமாவில் இருந்து திடீர் ஓய்வு? : சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் நடிகை சமந்தா!
Local
16 August 2026
கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் : காவல்துறை வெளியிட்ட அவசர அறிவிப்பு!
Local
16 August 2026
சர்வதேச கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்த ஸ்பெயின் கிரிக்கெட் அணி !
Local
16 August 2026
பிற்பகல் 2 மணிக்கு பின் வெளியே செல்வோரின் கவனத்திற்கு!
Local
16 August 2026
சாதனையாளன் விஜய்யை விட, சுதந்திர தின நிகழ்வில் பேசு பொருளாகிய நடிகை த்ரிஷா!
Local
16 August 2026
6 ஆண்டுகளில் 709 கைதிகள் தப்பி ஓட்டம் : பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - தீவிரமாகும் கண்காணிப்பு நடவடிக்கைகள்!
Local
16 August 2026
மரண தண்டனைக்கு முன்னர் நீதித்துறை சீர்திருத்தங்கள் அவசியம்: சிரேஷ்ட சட்டத்தரணி வலியுறுத்து!
Local
16 August 2026
பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள் எங்களுடனேயே வாழ விரும்புகிறார்கள்" – பாகிஸ்தான் ஜனாதிபதி பேச்சு!
Local
16 August 2026
இலங்கையில் மதுபானத்தால் ஏற்படும் பொருளியல் இழப்பு, வரி வருவாயை விட அதிகம்: ADIC சுட்டிக்காட்டு!
Local
16 August 2026