General15 August 2026

வீட்டுக் காவல் திட்டம் இலங்கையில் சாத்தியமா? சுந்தரலிங்கம் பிரதீப் சொன்ன முக்கிய தகவல்!

அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் போல இலங்கையில் ‘வீட்டுக் காவல்’ (House Arrest) முறையை உடனடியாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நாட்டினுடைய சட்ட நடைமுறைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பல வளர்ந்த நாடுகளிலும் குற்றவாளிகள் அல்லது சந்தேகநபர்களைச் சிறையில் அடைப்பதற்கு மாற்றாக வீட்டுக் காவலில் வைக்கும் நடைமுறை உள்ளது.

எனினும் இலங்கை முழுமையான வளர்ச்சியடைந்த நாடாக இல்லாததால், கண்காணிப்பு வசதிகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு சவால்கள் காரணமாக இத்தகைய திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த முடியாது.

ஒருவரை வீட்டுக் காவலில் வைக்கும்போது, அவரைப் பாதுகாப்பதற்கும் கண்காணிப்பதற்கும் பிரத்யேகப் பணியாளர்கள் தேவைப்படுவார்கள்.

இந்தநிலையில் உடனடியாகச் சாத்தியமில்லை என்றாலும், எதிர்காலத்தில் நாட்டின் சட்ட மற்றும் சிறைச்சாலைச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக நவீன மாற்று முறைகளை நோக்கி நகர்வது சிறந்த திட்டமாக அமையும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes