அரசியலமைப்பின் உத்தேச 22 ஆவது திருத்தம் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட பின்னர், மாகாண மட்டத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வுகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வழமையாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பிலேயே தனது நீதித்துறை அதிகாரங்களைப் பயன்படுத்தி வருகின்ற போதிலும், மாகாண மட்டத்தில் நீதிமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு அரசியலமைப்பில் ஏற்பாடுகள் காணப்படுகின்றன.
இதற்கு நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளதால், 22 ஆவது திருத்த வரைவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை 24 ஆக உயர்த்தும் ஏற்பாடு சேர்க்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புதிதாக 4 நீதியரசர்கள் சேர்க்கப்படுவதன் மூலம், சில மாகாணங்களில் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வுகள் ஒரு வருடம் வரை தொடரக்கூடும் என்றும், சில மாகாணங்களில் காலவரையறையின்றி நடைபெறக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாகாணத்திலும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே இந்த அமர்வுகளின் கால அளவு தீர்மானிக்கப்படும்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதையும், உச்ச நீதிமன்றங்களின் நீதியரசர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்ட 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலமும், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை மற்றும் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலமும் (18) செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
உட்பூசல்களாலேயே வலைப்பந்தாட்ட உலகக் கிண்ண வாய்ப்பை இலங்கை இழந்ததாக குற்றச்சாட்டு!
Local
17 August 2026
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 284 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!
Local
17 August 2026
கஞ்சாவை பறிமுதல் செய்து உலர்த்தக் கொடுத்த காவல்துறை: நீதிமன்ற உத்தரவின் கீழ் அதிரடி கைது நடவடிக்கை!
Local
17 August 2026
"உங்கள் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டது தவறுதான்": சட்டப்பேரவையில் மன்னிப்பு கோரிய முதலமைச்சர் விஜய்!
Local
17 August 2026
மறைமுக விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்துமாறு ஷாருக் கான் உள்ளிட்ட பொலிவூட் பிரபலங்களுக்கு மஹாராஷ்டிர அரசு எச்சரிக்கை!
Local
17 August 2026
சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கும் திட்டத்தில் இருக்கும் நடிகை த்ரிஷா?
Local
17 August 2026
'டிட்வா' சூறாவளி நிவாரண நிதியில் 70% செலவிடப்படாமல் உள்ளது!
Local
17 August 2026
ஒரு பில்லியன் டொலர் பணமோசடி செய்த நிறுவனம்: 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது!
Local
17 August 2026
போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
Local
17 August 2026
அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து தவறி விழுந்ததில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு
Local
17 August 2026