General18 August 2026

இந்தியா பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகிறார்!

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்வார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்மொழியப்பட்டுள்ள இந்த விஜயம் தொடர்பான கலந்துரையாடல்கள், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையே அண்மையில் நடைபெற்றன.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கூட்டு நடவடிக்கைகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆகிய விவகாரங்கள் குறித்து முக்கியமாக கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes