வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் (Remittances) அதிகரித்து வரும் சாதகமான போக்கின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் 9 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்பு இலக்கை எட்ட முடியும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் 5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை நாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே, 2028ஆம் ஆண்டில் எதிர்கொள்ள வேண்டியுள்ள குறிப்பிடத்தக்க வெளிநாட்டுக் கடன் மீளச் செலுத்தல்களை கருத்திற்கொண்டு, வெளிநாட்டு நாணய வருவாய் மூலங்களைப் பல்வகைப்படுத்துவதற்கும், அதிகளவிலான நேரடி வெளிநாட்டு முதலீடுகளை (FDI) நாட்டிற்கு ஈர்ப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே பிரதி அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.
முதலீடுகள், ஏற்றுமதிகள் மற்றும் வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளின் ஊடாக நாட்டிற்குள் வரும் நிகர வெளிநாட்டு நாணய வருவாயை அதிகரிப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
2028ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுமார் 3.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்த வேண்டியுள்ள நிலையில், பாரம்பரியமற்ற துறைகள் ஊடாக வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், சர்வதேச தொழிலாளர் சந்தையில் அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய துறைகளுக்கு இலங்கை தொழிலாளர்களை வழிநடத்துவதற்கான நிதி மற்றும் பொருளாதார உத்திகளும் வகுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Latest News
இஞ்சி அழுகல் நோய் அச்சுறுத்தல்: ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் எச்சரிக்கை!
Local
21 August 2026
எல் நினோ வறட்சி அச்சுறுத்தல்: நீர் விநியோகச் சட்டங்களில் உடனடி திருத்தங்கள்!
Local
21 August 2026
மகாத்மா காந்தியின் தனிப்பட்ட சிந்தனைகள் ரூ.16.20 கோடிக்கு ஏலம்: இந்திய வரலாற்றில் புதிய சாதனை!
Local
21 August 2026
வளையாபதி முதல் பத்மஸ்ரீ விருது வரை: காலம் கடந்து சாதனை படைத்த சௌகார் ஜானகி
Local
21 August 2026
பகிரங்க மன்னிப்பு கோரினார் அர்ச்சுனா - நாடாளுமன்றத்தில் கடைசி உரை எனவும் அறிவிப்பு
Local
21 August 2026
அது வெறுப்பல்ல.. மகிழ்ச்சியான கேலி": இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் விளக்கம்
Local
21 August 2026
எரிபொருள் விலை உயர்வால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பாதிப்பு - நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம்
Local
21 August 2026
2026 இறுதிக்குள் 9 பில்லியன் டொலர் வெளிநாட்டு கையிருப்பு இலக்கை அடைய முடியும் – நிதி பிரதி அமைச்சர்
Local
21 August 2026
இலங்கை ஆடவர் தேசிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்றுநராக ஹஷான் திலகரத்ன நியமனம்
Local
21 August 2026
மட்டக்களப்பில் நாளை முதல் தினமும் 4 மணிநேரம் நீர் விநியோகத் தடை: நீர்வழங்கல் சபை அறிவிப்பு!
Local
21 August 2026