வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் (Remittances) அதிகரித்து வரும் சாதகமான போக்கின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் 9 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்பு இலக்கை எட்ட முடியும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் 5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை நாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே, 2028ஆம் ஆண்டில் எதிர்கொள்ள வேண்டியுள்ள குறிப்பிடத்தக்க வெளிநாட்டுக் கடன் மீளச் செலுத்தல்களை கருத்திற்கொண்டு, வெளிநாட்டு நாணய வருவாய் மூலங்களைப் பல்வகைப்படுத்துவதற்கும், அதிகளவிலான நேரடி வெளிநாட்டு முதலீடுகளை (FDI) நாட்டிற்கு ஈர்ப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே பிரதி அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.
முதலீடுகள், ஏற்றுமதிகள் மற்றும் வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளின் ஊடாக நாட்டிற்குள் வரும் நிகர வெளிநாட்டு நாணய வருவாயை அதிகரிப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
2028ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுமார் 3.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்த வேண்டியுள்ள நிலையில், பாரம்பரியமற்ற துறைகள் ஊடாக வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், சர்வதேச தொழிலாளர் சந்தையில் அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய துறைகளுக்கு இலங்கை தொழிலாளர்களை வழிநடத்துவதற்கான நிதி மற்றும் பொருளாதார உத்திகளும் வகுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Latest News
நெதன்யாகுவை கைது செய்ய சிவப்பு பிடியாணை: இன்டர்போலிடம் துருக்கி கோரிக்கை
Local
22 August 2026
கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்க அமெரிக்கா தீர்மானம்: இன்று நள்ளிரவு முதல் அமுல்!
Local
22 August 2026
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக மைக் ஹசி!
Local
22 August 2026
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் உடல் இன்று பொதுமக்களின் அஞ்சலிக்காக வைப்பு
Local
22 August 2026
வாகனங்களை கவனக்குறைவாக விட்டுச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கும் இலங்கை காவல்துறை
Local
22 August 2026
மலைப்பாம்பிற்கு புற்றுநோய் சிகிச்சை - உலகிலேயே முதல்முறை நிகழ்ந்த அற்புதம்!
Local
22 August 2026
ருமேஷ் தரங்க அபாரம்: லுசானே டைமண்ட் லீக்கில் இலங்கைக்கு தங்கம்
Local
22 August 2026
இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை வீதி விபத்துக்களால் 1,654 உயிரிழப்பு
Local
22 August 2026
அரச புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சல்லேயின் மனைவி, ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை!
Local
22 August 2026
கொழும்பு போர்ட் சிட்டி கடத்தல், : 3 சீனர்களை தேடும் இலங்கை காவல்துறை
Local
22 August 2026