வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் (Remittances) அதிகரித்து வரும் சாதகமான போக்கின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் 9 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்பு இலக்கை எட்ட முடியும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் 5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை நாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே, 2028ஆம் ஆண்டில் எதிர்கொள்ள வேண்டியுள்ள குறிப்பிடத்தக்க வெளிநாட்டுக் கடன் மீளச் செலுத்தல்களை கருத்திற்கொண்டு, வெளிநாட்டு நாணய வருவாய் மூலங்களைப் பல்வகைப்படுத்துவதற்கும், அதிகளவிலான நேரடி வெளிநாட்டு முதலீடுகளை (FDI) நாட்டிற்கு ஈர்ப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே பிரதி அமைச்சர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.
முதலீடுகள், ஏற்றுமதிகள் மற்றும் வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளின் ஊடாக நாட்டிற்குள் வரும் நிகர வெளிநாட்டு நாணய வருவாயை அதிகரிப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
2028ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுமார் 3.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்த வேண்டியுள்ள நிலையில், பாரம்பரியமற்ற துறைகள் ஊடாக வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், சர்வதேச தொழிலாளர் சந்தையில் அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய துறைகளுக்கு இலங்கை தொழிலாளர்களை வழிநடத்துவதற்கான நிதி மற்றும் பொருளாதார உத்திகளும் வகுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Latest News
விஜய்யின் அம்மா ஷோபாவிற்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு
Local
25 August 2026
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி : இலங்கையில் சட்டென குறைந்த தங்க விலை!
Local
25 August 2026
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான நீர் விநியோகம் வழமைக்கு திரும்பியது
Local
25 August 2026
கேரளாவில் 100 மீட்டர் தொலைவில் சிறுத்தை – விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் ஆபத்தான பயணம்!
Local
25 August 2026
அதிவேகப் பேருந்து நடத்துனர் உட்பட 9 பேர் போதைப்பொருளுடன் சிக்கினர்: மாகும்பரவில் அதிரடி சோதனை!
Local
25 August 2026
எம்.எஸ்.தோனி, மார்க் பவுச்சரின் சாதனைகளை முறியடித்தார் ரிஷப் பண்ட் !
Local
25 August 2026
தமிழக வெற்றிக்கழக அமைச்சர் மீது நில ஆக்கிரமிப்பு முறைப்பாடு: அரசியலில் பெரும் புயல்!
Local
25 August 2026
தேவ்தத் படிக்கலின் தொடர் சதங்கள்: கம்பீரின் முடிவுகளுக்கு ஸ்ரீகாந்த் கடும் எச்சரிக்கை!
Local
25 August 2026
"பஸ் லலித்" மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திடம் ஒப்படைப்பு!
Local
25 August 2026
இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர் இறுதிச்சடங்கிற்கு உயிருடன் வந்ததால் அதிர்ச்சி ! கல்கமுவவில் பரபரப்பு
Local
25 August 2026