General21 August 2026

எரிபொருள் விலை உயர்வால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பாதிப்பு - நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம்

எரிபொருள் விலை மாற்றங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய பதிலளித்துள்ளார்.

எரிபொருள் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்வதாகவும், இதற்கு நீண்டகாலத் தீர்வொன்றை அரசாங்கம் முன்னெடுக்குமா என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பிரதமர், குறைந்த வருமானம் கொண்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த ஆண்டும் அரசாங்கத்தினால் நிவாரணத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதன் கீழ், தேவைக்கேற்ப குறிப்பிட்ட சில துறைகளுக்கு எரிபொருள் நிவாரணம் மற்றும் மின்சாரக் கட்டணச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தைப் பேணுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைப் பாதிக்கும் சூழ்நிலைகளை சமாளிப்பதற்காக சில நடைமுறைகள் மற்றும் சலுகைக் காலங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes