General22 August 2026

நெடுந்தீவு மட்டக் குதிரைகளுக்கு குடிநீர் வழங்கும் இலங்கை கடற்படை!

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இயற்கை நீர்நிலைகள் வற்றிப்போயுள்ள நிலையில், அங்குள்ள மட்டக் குதிரைகளுக்குக் (ponies) குடிநீர் வழங்கும் பணியை இலங்கை கடற்படை தொடங்கியுள்ளது.

வட கடற்படை கட்டளைப் பிரிவினால் நேற்று(21) தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், 'வசப' கடற்படை முகாம் மூலம் தீவின் மேற்குப் பகுதியில் உள்ள வெள்ளை பகுதியில் உலாவரும் மட்டக் குதிரைகளுக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.

நெடுந்தீவின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 'க்ளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) தேசிய திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய அம்சமான நெடுந்தீவு மட்டக் குதிரைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளன.

அதேவேளை, தீவகப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள எதிர்திசை சவ்வூடுபரவல் (Reverse osmosis) சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கும் பணிகளையும் கடற்படை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
Related recommendation
Hiru TV News | Programmes