அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு வேதனத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்குவது தொடர்பாக, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னர் தமிழக அரசு உரிய முடிவை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், நீதிமன்றமே தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கு வேதனத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த நர்மதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
கர்நாடகா, பீகார், ஒடிசா மற்றும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் இதுபோன்ற கொள்கை நடைமுறையில் உள்ளதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருவதால், அது நிறைவடைந்த பின்னர் இதுதொடர்பாக அரசு உரிய முடிவை எடுக்கும் என அரசுத் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்ததும், பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்குவது தொடர்பாக அரசு உரிய முடிவை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
அவ்வாறு அரசு முடிவெடுக்கத் தவறினால், நீதிமன்றமே தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும் என எச்சரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
Latest News
விடுதலை சிறுத்தைகள் இன்று பெருத்தைகள் - நடிகர் பார்த்தீபன்
Local
31 August 2026
பமுனுகம - எப்பாமுல்ல கடலில் நீராடச் சென்ற தாய், அவரது மகள் மற்றும் சிறுமியின் உடலங்கள் மீட்பு
Local
31 August 2026
வாக்களித்தவர்களுக்கு உண்மையாக இருக்க விஜய் செய்த காரியம்
Local
31 August 2026
தோனியின் ஹெலிகொப்டர் ஷொட்: செய்து காட்டிய பிரசாந்த் வீர்
Local
31 August 2026
உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: ஐ.நா. கேள்விகளுக்கு அரசு உரிய பதிலளிக்கவில்லை - அஜித் பி. பெரேரா குற்றச்சாட்டு
Local
31 August 2026
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
Local
31 August 2026
விஜய் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி விடுவோம்: காங்கிரஸின் அறிவிப்பு
Local
31 August 2026
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியம்
Local
31 August 2026
ஈரானின் லராக் தீவிலுள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்
Local
31 August 2026
பமுனுகம - எப்பாமுல்ல கடற்பகுதியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்
Local
31 August 2026