அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு வேதனத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்குவது தொடர்பாக, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னர் தமிழக அரசு உரிய முடிவை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், நீதிமன்றமே தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கு வேதனத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த நர்மதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
கர்நாடகா, பீகார், ஒடிசா மற்றும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் இதுபோன்ற கொள்கை நடைமுறையில் உள்ளதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருவதால், அது நிறைவடைந்த பின்னர் இதுதொடர்பாக அரசு உரிய முடிவை எடுக்கும் என அரசுத் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்ததும், பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்குவது தொடர்பாக அரசு உரிய முடிவை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
அவ்வாறு அரசு முடிவெடுக்கத் தவறினால், நீதிமன்றமே தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும் என எச்சரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
Latest News
சுயசரிதை எழுதுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!
Local
01 September 2026
மேசை டென்னிஸ் பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் தாவி சமரவீர
Local
01 September 2026
ஹோர்ட்டன் சமவெளிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!
Local
01 September 2026
இந்திய கிரிக்கட்டுக்குள் நுழையும் ஜூனியர் சுரேஸ் ரெய்னா
Local
01 September 2026
மருத்துவ அதிகாரிகளுக்கான இடைநிலைத் தரம்: பரிந்துரைக்காக அறுவர் கொண்ட குழு நியமனம்!
Local
01 September 2026
22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்!
Local
01 September 2026
பிரித்தானியா செல்லும் முதலமைச்சர் விஜய் : மனைவியை சந்திப்பதாக வெளியாகும் பரபரப்புத் தகவல்!
Local
01 September 2026
22வது திருத்தம் தொடர்பில் சாதனை அளவாக உயர் நீதிமன்றத்தில் 67 மனுக்கள் தாக்கல்!
Local
01 September 2026
கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளுடன் வவுனியாவில் ஒருவர் கைது !
Local
01 September 2026
மேட்டூர் அணை திறப்பு: காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்
Local
01 September 2026