அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு வேதனத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்குவது தொடர்பாக, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னர் தமிழக அரசு உரிய முடிவை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், நீதிமன்றமே தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கு வேதனத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த நர்மதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
கர்நாடகா, பீகார், ஒடிசா மற்றும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் இதுபோன்ற கொள்கை நடைமுறையில் உள்ளதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருவதால், அது நிறைவடைந்த பின்னர் இதுதொடர்பாக அரசு உரிய முடிவை எடுக்கும் என அரசுத் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்ததும், பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்குவது தொடர்பாக அரசு உரிய முடிவை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
அவ்வாறு அரசு முடிவெடுக்கத் தவறினால், நீதிமன்றமே தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும் என எச்சரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
Latest News
22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் இன்று பரிசீலனைக்கு!
Local
01 September 2026
கிரிக்கெட் தெரிவுக்குழு தலையீடுகள் இன்றி சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க வேண்டும்!
Local
01 September 2026
அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: முதல் சுட்டிலேயே மரியானோ நவோனிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார் நோவக் ஜோகோவிச்
Local
01 September 2026
வீனஸ் வில்லியம்ஸை தோற்கடித்த சோபியா
Local
01 September 2026
கிரீஸ் - இஸ்ரேல் இடையே 3.5 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம்: ஏவுகணை தடுப்பு அமைப்பும் கொள்முதல்
Local
01 September 2026
அல்-அக்சா மசூதி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய அமைச்சர்
Local
01 September 2026
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு: இருதரப்பு உறவுகளைபலப்படுத்த உறுதி
Local
01 September 2026
வெள்ளை மாளிகை பிரதான மண்டபக் கட்டுமானம்: ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!
Local
01 September 2026
ஹோர்முஸ் நீரிணை குறித்த டிரம்பின் அறிவிப்பு!
Local
01 September 2026
லொக்கர்பி வெடிகுண்டு வழக்கு: அமெரிக்க நீதிமன்ற விசாரணை புதிய ஆதாரங்களால் ஒத்திவைப்பு!
Local
01 September 2026