நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் தினமொன்றில் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (29) முற்பகல் நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்திற்கு சென்ற சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவரது சட்டத்தரணிகள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
தேசிய லொத்தர் சபைக்கு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்தமை தொடர்பான விசாரணையொன்றுக்கு அமைவாக, ரவி கருணாநாயக்கவை கையூட்டல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், நேற்று முற்பகல் அதிகாரிகள் குழுவொன்று பத்தரமுல்லை, ரஜமல்வத்த வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு சென்றுள்ளது.
எனினும், அந்தச் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வீட்டில் இருக்காததால், ஆணைக்குழுவின் அதிகாரிகள் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ரவி கருணாநாயக்கவின் தரப்பினர் ஊடகங்களுக்கு விளக்கமொன்றையும் வழங்கியுள்ளனர்.
குறித்த தினத்தில் நாடாளுமன்ற உறுப்பினரால் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாத நிலையில், அவரது சட்டத்தரணிகள் ஊடாக வேறு ஒரு தினத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவரது தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் பின்னணியிலேயே கையூட்டல் ஒழிப்பு விசாணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு வந்ததாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் தினமொன்றில் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாகவும் அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (29) முற்பகல் நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்திற்கு சென்ற சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவரது சட்டத்தரணிகள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
தேசிய லொத்தர் சபைக்கு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்தமை தொடர்பான விசாரணையொன்றுக்கு அமைவாக, ரவி கருணாநாயக்கவை கையூட்டல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், நேற்று முற்பகல் அதிகாரிகள் குழுவொன்று பத்தரமுல்லை, ரஜமல்வத்த வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு சென்றுள்ளது.
எனினும், அந்தச் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வீட்டில் இருக்காததால், ஆணைக்குழுவின் அதிகாரிகள் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ரவி கருணாநாயக்கவின் தரப்பினர் ஊடகங்களுக்கு விளக்கமொன்றையும் வழங்கியுள்ளனர்.
குறித்த தினத்தில் நாடாளுமன்ற உறுப்பினரால் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாத நிலையில், அவரது சட்டத்தரணிகள் ஊடாக வேறு ஒரு தினத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவரது தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் பின்னணியிலேயே கையூட்டல் ஒழிப்பு விசாணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு வந்ததாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் தினமொன்றில் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாகவும் அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
Latest News
கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 இலட்சத்துக்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் இடைவிலகல்: காரணம் என்ன?
Local
03 September 2026
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சஜீவனி தில்கா லக்மாலி பதவிப் பிரமாணம்
Local
03 September 2026
புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு – கலஹா பகுதியில் சோகம்
Local
03 September 2026
இளநீர் உற்பத்தியை அதிகரிக்க 250 புதிய கிராமங்கள்: மூன்று ஆண்டு தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்
Local
03 September 2026
அபுதாபியில் இருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்
Local
03 September 2026
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஏ.ஜே.எம். முசம்மிலின் மூத்த மகன் விடுதலை
Local
03 September 2026
வாகன இறக்குமதி மூலம் சுங்கத்திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு
Local
03 September 2026
1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக ‘Rich Dad Poor Dad’ ஆசிரியர் தகவல்! ரொபர்ட் கியோசாகி வெளியிட்ட அதிரடித் தகவல்!
Local
03 September 2026
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
Local
03 September 2026
சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Local
03 September 2026