General05 September 2026

தோட்டத் தொழிலாளர்களின் துயரம்: முறையான வேலைவாய்ப்பின்றி காணப்படும் தலவாக்கலை மக்கள்!

தலவாக்கலை பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு முறையான வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, தலவாக்கலை பகுதியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தோட்டப் பகுதிகளில் வேலை செய்வதோடு, கொழும்பில் தேநீர் கடைகளில் தேநீர் தயாரிக்கும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களுக்கான வேலைவாய்ப்புகளையோ மாற்றுச் செயல்களையோ ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனவும், வெறும் வார்த்தைகளால் மட்டுமே பேசுவதாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.

தமக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், பொதுமக்களின் பிரச்சினைகளைத் தெரிந்துகொண்டே தாம் செயற்படுவதாக பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய அரசாங்கத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்குச் செய்ய வேண்டிய எவ்வித நலத்திட்டங்களையும் செய்யாமல் வீடுகளை மாத்திரம் நிர்மாணித்துவிட்டு ஏமாற்றி வருவதாகவும், அவர்களிடம் சமூக வலைத்தளங்கள் பலமாக உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் சுட்டிகாட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes