நாட்டின் ஜனநாயக அமைப்பும் மக்களின் இறையாண்மையும் தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் படி இறையாண்மை மக்களுக்கே உரியது என்றும், அதனை அரசாங்கம் சரியாக அங்கீகரிக்கத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வாதிகாரப் போக்குடன் செயற்படாமல், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே தாம் நீதிமன்றத்தை நாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகள் முறையான காரணங்களின்றி கைது செய்யப்படுவதாகவும், எதிர்க்கட்சிகள், சுயாதீன தொழிற்சங்கங்கள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கம் போன்ற அமைப்புகள் முடக்கப்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
"தற்போதைய சூழலில் நாடாளுமன்றத்திலிருந்தா? அல்லது பெலவத்தையிலிருந்தா? நாடு ஆளப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை 1946 ஆம் ஆண்டு டி.எஸ். சேனாநாயக உள்ளிட்ட தலைவர்கள் இணைந்து சுதந்திர இலங்கையை உருவாக்கியது போல், தற்போதும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க அனைத்துப் பிரிவினரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டமைக்குத் தாம் கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் படி இறையாண்மை மக்களுக்கே உரியது என்றும், அதனை அரசாங்கம் சரியாக அங்கீகரிக்கத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வாதிகாரப் போக்குடன் செயற்படாமல், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே தாம் நீதிமன்றத்தை நாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகள் முறையான காரணங்களின்றி கைது செய்யப்படுவதாகவும், எதிர்க்கட்சிகள், சுயாதீன தொழிற்சங்கங்கள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கம் போன்ற அமைப்புகள் முடக்கப்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
"தற்போதைய சூழலில் நாடாளுமன்றத்திலிருந்தா? அல்லது பெலவத்தையிலிருந்தா? நாடு ஆளப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை 1946 ஆம் ஆண்டு டி.எஸ். சேனாநாயக உள்ளிட்ட தலைவர்கள் இணைந்து சுதந்திர இலங்கையை உருவாக்கியது போல், தற்போதும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க அனைத்துப் பிரிவினரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டமைக்குத் தாம் கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
Latest News
இங்கிலாந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நியமனம்!
Local
07 September 2026
ஆண்டிற்கு ஒருமுறை வரும் இயற்கை அழகு: தேயிலைத் தோட்டங்களை ஆக்கிரமித்த கஹகோனா மலர்கள்!
Local
07 September 2026
திமுகவை ஓட ஓட விரட்டுகிறார் முதலமைச்சர் விஜய் : தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!
Local
07 September 2026
சோம்பேறித்தனத்திற்கு கிடைத்த விசித்திர தண்டனை: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இளைஞரின் ஏஐ லீலை!
Local
07 September 2026
கடவுள் தந்த பரிசு: ராமராஜன் - இளையராஜா இணையும் 25வது படத்தின் மாஸ் டைட்டில்!
Local
07 September 2026
விரைவில் வெளியாகிறது ரவி மோகன் - கெனிஷா கூட்டணியின் முதல் பாடல்: பின்னணி விவரங்கள் இதோ!
Local
07 September 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீளாய்வு: விண்ணப்பங்கள் கோரல்!
Local
07 September 2026
சிறையிலிருந்து நாடாளுமன்றம் வருவதற்கு அனுமதி கோரும் நாமல் - சபாநாயகருக்கு கடிதம்!
Local
07 September 2026
தெஹிவளையில் பாதாள உலகக் கும்பல் உறுப்பினரின் மைத்துனர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழப்பு
Local
07 September 2026
அரச சுரங்கங்களை பிடியில் வைத்துள்ள விஜய்யின் நண்பர்கள் : பகிரங்க குற்றம் சாட்டிய உதயநிதி ஸ்டாலின்!
Local
07 September 2026