நாட்டில் நிலவிய கறுப்புப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தி இந்த அரசாங்கம் நாட்டின் வருமானத்தை உயர்த்தியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
களுத்துறை - புலத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் பெரும் சிரமத்துக்கு மத்தியில் ஈட்டப்படும் அமெரிக்க டொலர்கள், சட்டவிரோதமான வழிகள் மற்றும் கறுப்புச் சந்தை ஊடாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு கடத்தப்பட்ட தொகையானது சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், இது இலங்கை தேயிலை ஏற்றுமதி மூலம் ஈட்டும் மொத்த வருமானத்துக்கு நிகரான தொகை என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றின் தீவிர தலையீடு காரணமாக, டொலர்கள் கறுப்புப் பொருளாதாரத்துக்குள் சட்டவிரோதமாகச் செல்வது தற்போது வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் வரிகள், கட்டணங்கள் மற்றும் அரச காணிகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் அரசாங்க திறைசேரிக்கு வர வேண்டிய வருமானம், திறைசேரியை அடையும் முன்பே அதிகாரிகளின் வீடுகளுக்குச் சென்றதாகவும், திறைசேரிக்கு வந்த நிதியிலும் ஒரு பகுதி சுருட்டப்பட்டதால் அது வெறுமையாகும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தற்போதைய அரசாங்கம், முறைகேடான அனைத்து வழிகளையும் அடைத்து, வருமானம் முழுவதையும் திறைசேரிக்கு நேரடியாகக் கொண்டு சேர்த்துள்ளதன் விளைவாக, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் 16.7% எனும் அதிகபட்ச அரச வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
களுத்துறை - புலத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் பெரும் சிரமத்துக்கு மத்தியில் ஈட்டப்படும் அமெரிக்க டொலர்கள், சட்டவிரோதமான வழிகள் மற்றும் கறுப்புச் சந்தை ஊடாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு கடத்தப்பட்ட தொகையானது சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், இது இலங்கை தேயிலை ஏற்றுமதி மூலம் ஈட்டும் மொத்த வருமானத்துக்கு நிகரான தொகை என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றின் தீவிர தலையீடு காரணமாக, டொலர்கள் கறுப்புப் பொருளாதாரத்துக்குள் சட்டவிரோதமாகச் செல்வது தற்போது வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் வரிகள், கட்டணங்கள் மற்றும் அரச காணிகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் அரசாங்க திறைசேரிக்கு வர வேண்டிய வருமானம், திறைசேரியை அடையும் முன்பே அதிகாரிகளின் வீடுகளுக்குச் சென்றதாகவும், திறைசேரிக்கு வந்த நிதியிலும் ஒரு பகுதி சுருட்டப்பட்டதால் அது வெறுமையாகும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தற்போதைய அரசாங்கம், முறைகேடான அனைத்து வழிகளையும் அடைத்து, வருமானம் முழுவதையும் திறைசேரிக்கு நேரடியாகக் கொண்டு சேர்த்துள்ளதன் விளைவாக, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் 16.7% எனும் அதிகபட்ச அரச வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
Latest News
ரொபோக்களின் விநோத போராட்டம்: மனிதர்களுக்குப் பதிலாக களமிறங்கி கோரிக்கை விடுத்த இயந்திர மனிதர்கள்!
Local
11 September 2026
கனடாவின் புதிய சாதனை: நயகரா ஆற்றில் உருவாக்கப்பட்ட இயற்கை வாழ்விடங்கள்!
Local
11 September 2026
கிரிக்கெட் கழகங்களைத் தரம் மாற்றிய விவகாரம்: நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு உத்தரவு!
Local
11 September 2026
ஒரே நாளில் மோதிக்கொண்ட சர்தார் 2 மற்றும் மண்டாடி: வசூலில் சாதனை படைத்த விபரங்கள்!
Local
11 September 2026
நாட்டின் சில பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
Local
11 September 2026
இணையத்தில் தீயாய் பரவும் செல்ஃபி: அஜித்குமாரின் பந்தயத்தை நேரில் காண்பாரா த்ரிஷா?
Local
11 September 2026
இந்தியாவில் மீட்கப்பட்ட ஒராங்குட்டான்கள்: இந்தோனேசியாவுடன் கூட்டு விசாரணை - வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்!
Local
11 September 2026
ஏஐ மாடல்களைப் பயன்படுத்தி உயிரியல் ஆயுதம் தயாரிக்க முயன்ற விஞ்ஞானிகளின் கணக்குகள் முடக்கம்!
Local
11 September 2026
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து எதிர்க்கட்சி விலகல்: ரஞ்சித் மத்தும பண்டார அறிவிப்பு
Local
11 September 2026
மாகாண சபைத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு? - கொதித்தெழுந்த எதிர்க்கட்சி!
Local
11 September 2026