நாட்டில் நிலவிய கறுப்புப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தி இந்த அரசாங்கம் நாட்டின் வருமானத்தை உயர்த்தியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
களுத்துறை - புலத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் பெரும் சிரமத்துக்கு மத்தியில் ஈட்டப்படும் அமெரிக்க டொலர்கள், சட்டவிரோதமான வழிகள் மற்றும் கறுப்புச் சந்தை ஊடாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு கடத்தப்பட்ட தொகையானது சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், இது இலங்கை தேயிலை ஏற்றுமதி மூலம் ஈட்டும் மொத்த வருமானத்துக்கு நிகரான தொகை என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றின் தீவிர தலையீடு காரணமாக, டொலர்கள் கறுப்புப் பொருளாதாரத்துக்குள் சட்டவிரோதமாகச் செல்வது தற்போது வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் வரிகள், கட்டணங்கள் மற்றும் அரச காணிகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் அரசாங்க திறைசேரிக்கு வர வேண்டிய வருமானம், திறைசேரியை அடையும் முன்பே அதிகாரிகளின் வீடுகளுக்குச் சென்றதாகவும், திறைசேரிக்கு வந்த நிதியிலும் ஒரு பகுதி சுருட்டப்பட்டதால் அது வெறுமையாகும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தற்போதைய அரசாங்கம், முறைகேடான அனைத்து வழிகளையும் அடைத்து, வருமானம் முழுவதையும் திறைசேரிக்கு நேரடியாகக் கொண்டு சேர்த்துள்ளதன் விளைவாக, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் 16.7% எனும் அதிகபட்ச அரச வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
களுத்துறை - புலத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் பெரும் சிரமத்துக்கு மத்தியில் ஈட்டப்படும் அமெரிக்க டொலர்கள், சட்டவிரோதமான வழிகள் மற்றும் கறுப்புச் சந்தை ஊடாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு கடத்தப்பட்ட தொகையானது சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், இது இலங்கை தேயிலை ஏற்றுமதி மூலம் ஈட்டும் மொத்த வருமானத்துக்கு நிகரான தொகை என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றின் தீவிர தலையீடு காரணமாக, டொலர்கள் கறுப்புப் பொருளாதாரத்துக்குள் சட்டவிரோதமாகச் செல்வது தற்போது வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் வரிகள், கட்டணங்கள் மற்றும் அரச காணிகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் அரசாங்க திறைசேரிக்கு வர வேண்டிய வருமானம், திறைசேரியை அடையும் முன்பே அதிகாரிகளின் வீடுகளுக்குச் சென்றதாகவும், திறைசேரிக்கு வந்த நிதியிலும் ஒரு பகுதி சுருட்டப்பட்டதால் அது வெறுமையாகும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தற்போதைய அரசாங்கம், முறைகேடான அனைத்து வழிகளையும் அடைத்து, வருமானம் முழுவதையும் திறைசேரிக்கு நேரடியாகக் கொண்டு சேர்த்துள்ளதன் விளைவாக, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் 16.7% எனும் அதிகபட்ச அரச வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
Latest News
தமிழக சட்டமன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு: சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட திமுக - பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட உறுப்பினர்கள்!
Local
08 September 2026
செப்.19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்!
Local
08 September 2026
ஆபத்தில் திபெத் பீடபூமி : வேகமாக மறையும் பனிப்பாறைகள் - பேராபத்து காத்திருக்கிறதா?
Local
08 September 2026
"சினிமா பாணியில் உரை - மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது" : முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்த கிருஷ்ணசாமி!
Local
08 September 2026
சதொசவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகம்: சானக மதுகொட குற்றச்சாட்டு!
Local
08 September 2026
மஹிந்த தலைமையில் அனுராதபுர பேரணி: ஐக்கிய தேசியக் கட்சி வாழ்த்து!
Local
08 September 2026
அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை நாடளாவிய அடையாள பணிப்புறக்கணிப்பு
Local
08 September 2026
சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண ஓய்வு!
Local
08 September 2026
கையூட்டல் பெற்ற பாடசாலை அதிபர் கைது!
Local
08 September 2026
வட மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் : பிரதமர் ஹரிணி அமரசூரிய முக்கிய அறிவிப்பு!
Local
08 September 2026