நாட்டில் நிலவிய கறுப்புப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தி இந்த அரசாங்கம் நாட்டின் வருமானத்தை உயர்த்தியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
களுத்துறை - புலத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் பெரும் சிரமத்துக்கு மத்தியில் ஈட்டப்படும் அமெரிக்க டொலர்கள், சட்டவிரோதமான வழிகள் மற்றும் கறுப்புச் சந்தை ஊடாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு கடத்தப்பட்ட தொகையானது சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், இது இலங்கை தேயிலை ஏற்றுமதி மூலம் ஈட்டும் மொத்த வருமானத்துக்கு நிகரான தொகை என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றின் தீவிர தலையீடு காரணமாக, டொலர்கள் கறுப்புப் பொருளாதாரத்துக்குள் சட்டவிரோதமாகச் செல்வது தற்போது வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் வரிகள், கட்டணங்கள் மற்றும் அரச காணிகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் அரசாங்க திறைசேரிக்கு வர வேண்டிய வருமானம், திறைசேரியை அடையும் முன்பே அதிகாரிகளின் வீடுகளுக்குச் சென்றதாகவும், திறைசேரிக்கு வந்த நிதியிலும் ஒரு பகுதி சுருட்டப்பட்டதால் அது வெறுமையாகும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தற்போதைய அரசாங்கம், முறைகேடான அனைத்து வழிகளையும் அடைத்து, வருமானம் முழுவதையும் திறைசேரிக்கு நேரடியாகக் கொண்டு சேர்த்துள்ளதன் விளைவாக, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் 16.7% எனும் அதிகபட்ச அரச வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
களுத்துறை - புலத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் பெரும் சிரமத்துக்கு மத்தியில் ஈட்டப்படும் அமெரிக்க டொலர்கள், சட்டவிரோதமான வழிகள் மற்றும் கறுப்புச் சந்தை ஊடாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு கடத்தப்பட்ட தொகையானது சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், இது இலங்கை தேயிலை ஏற்றுமதி மூலம் ஈட்டும் மொத்த வருமானத்துக்கு நிகரான தொகை என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றின் தீவிர தலையீடு காரணமாக, டொலர்கள் கறுப்புப் பொருளாதாரத்துக்குள் சட்டவிரோதமாகச் செல்வது தற்போது வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் வரிகள், கட்டணங்கள் மற்றும் அரச காணிகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் அரசாங்க திறைசேரிக்கு வர வேண்டிய வருமானம், திறைசேரியை அடையும் முன்பே அதிகாரிகளின் வீடுகளுக்குச் சென்றதாகவும், திறைசேரிக்கு வந்த நிதியிலும் ஒரு பகுதி சுருட்டப்பட்டதால் அது வெறுமையாகும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தற்போதைய அரசாங்கம், முறைகேடான அனைத்து வழிகளையும் அடைத்து, வருமானம் முழுவதையும் திறைசேரிக்கு நேரடியாகக் கொண்டு சேர்த்துள்ளதன் விளைவாக, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் 16.7% எனும் அதிகபட்ச அரச வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
Latest News
நாட்டுக்கே உரிய மனித உரிமை ஆணைகள் காலவரையறையின்றி நீடிக்கக் கூடாது – ஐ.நா.விடம் இலங்கை கோரிக்கை
Local
09 September 2026
நடிகர் அஜித்தின் மறுபக்கம்: படப்பிடிப்புத் தளத்தில் அவர் காட்டும் அன்பு குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சி!
Local
09 September 2026
ஒரே ஒரு முடிவு மொத்த வாழ்க்கையையும் மாற்றுமா? : இயக்குநர் ஜேசன் சஞ்சய் வைரல் பேச்சு!
Local
09 September 2026
இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் 3 புதிய பாலங்கள் திறப்பு!
Local
09 September 2026
இந்தியா - இலங்கை இடையே மூன்று புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
Local
09 September 2026
இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புக்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்பு - ஜனாதிபதி!
Local
09 September 2026
குறைந்த எடைக் கொண்ட பாணை விற்பனை செய்த 54 இடங்கள் முற்றுகை
Local
09 September 2026
தலவத்துகொடை கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது
Local
09 September 2026
சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்காதவர்களுக்கு செப்டம்பர் 30 வரை கால அவகாசம்
Local
09 September 2026
டிட்வா சூறாவளியால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவு டிசம்பர் 31 வரை நீடிப்பு
Local
09 September 2026