நாட்டில் நிலவிய கறுப்புப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தி இந்த அரசாங்கம் நாட்டின் வருமானத்தை உயர்த்தியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
களுத்துறை - புலத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் பெரும் சிரமத்துக்கு மத்தியில் ஈட்டப்படும் அமெரிக்க டொலர்கள், சட்டவிரோதமான வழிகள் மற்றும் கறுப்புச் சந்தை ஊடாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு கடத்தப்பட்ட தொகையானது சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், இது இலங்கை தேயிலை ஏற்றுமதி மூலம் ஈட்டும் மொத்த வருமானத்துக்கு நிகரான தொகை என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றின் தீவிர தலையீடு காரணமாக, டொலர்கள் கறுப்புப் பொருளாதாரத்துக்குள் சட்டவிரோதமாகச் செல்வது தற்போது வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் வரிகள், கட்டணங்கள் மற்றும் அரச காணிகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் அரசாங்க திறைசேரிக்கு வர வேண்டிய வருமானம், திறைசேரியை அடையும் முன்பே அதிகாரிகளின் வீடுகளுக்குச் சென்றதாகவும், திறைசேரிக்கு வந்த நிதியிலும் ஒரு பகுதி சுருட்டப்பட்டதால் அது வெறுமையாகும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தற்போதைய அரசாங்கம், முறைகேடான அனைத்து வழிகளையும் அடைத்து, வருமானம் முழுவதையும் திறைசேரிக்கு நேரடியாகக் கொண்டு சேர்த்துள்ளதன் விளைவாக, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் 16.7% எனும் அதிகபட்ச அரச வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
களுத்துறை - புலத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் பெரும் சிரமத்துக்கு மத்தியில் ஈட்டப்படும் அமெரிக்க டொலர்கள், சட்டவிரோதமான வழிகள் மற்றும் கறுப்புச் சந்தை ஊடாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு கடத்தப்பட்ட தொகையானது சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், இது இலங்கை தேயிலை ஏற்றுமதி மூலம் ஈட்டும் மொத்த வருமானத்துக்கு நிகரான தொகை என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றின் தீவிர தலையீடு காரணமாக, டொலர்கள் கறுப்புப் பொருளாதாரத்துக்குள் சட்டவிரோதமாகச் செல்வது தற்போது வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் வரிகள், கட்டணங்கள் மற்றும் அரச காணிகளை குத்தகைக்கு விடுவதன் மூலம் அரசாங்க திறைசேரிக்கு வர வேண்டிய வருமானம், திறைசேரியை அடையும் முன்பே அதிகாரிகளின் வீடுகளுக்குச் சென்றதாகவும், திறைசேரிக்கு வந்த நிதியிலும் ஒரு பகுதி சுருட்டப்பட்டதால் அது வெறுமையாகும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தற்போதைய அரசாங்கம், முறைகேடான அனைத்து வழிகளையும் அடைத்து, வருமானம் முழுவதையும் திறைசேரிக்கு நேரடியாகக் கொண்டு சேர்த்துள்ளதன் விளைவாக, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் 16.7% எனும் அதிகபட்ச அரச வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
Latest News
இலங்கையில் 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் இறக்குமதி: பயணிகள் போக்குவரத்தில் புதிய மறுமலர்ச்சி!
Local
08 September 2026
சட்டமன்ற உடல்மொழி சர்ச்சை குறித்து முதலமைச்சர் விஜய் விளக்கம்
Local
08 September 2026
சட்டவிரோத நடவடிக்கைகளால் பறிபோன சலுகை: தாய்லாந்துக்கான இலவச விசா வசதி திடீர் ரத்து!
Local
08 September 2026
உள்நாட்டு பொறிமுறையிலேயே பொறுப்புகூறலில் நிலையான முன்னேற்றம் ஏற்படும் - ஜெனீவாவில் இலங்கை வலியுறுத்து!
Local
08 September 2026
ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல் : பாரிஸில் பரபரப்பு!
Local
08 September 2026
உலக நாடுகளின் பார்வையை ஈர்த்த வட கொரியா - ரஷ்யா இணைப்புப் பாலம் திறப்பு!
Local
08 September 2026
இமயம் பாரதிராஜாவின் இறுதித் திரைப்பயணம்... 'புலவர்' சிறு முன்னோட்டம் வெளியீடு!
Local
08 September 2026
20 ஆண்டு கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி: 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.450 கோடி நிவாரணம்
Local
08 September 2026
விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது த்ரிஷா அனுப்பிய அந்த ஒரு குறுஞ்செய்தி : மாளவிகா மோகனன் பகிர்ந்த இரகசியம்!
Local
08 September 2026
இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் முன்னேற்றம் வரம்பிற்குட்பட்டதாகவே உள்ளது - ஐநா மனித உரிமைகள் அலுவலகம்
Local
08 September 2026