இலங்கையின் இலவச சுகாதாரத் துறையில் நோயாளர்கள் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் தற்போதைய நடைமுறையை மாற்றி, புதிய சீர்திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாடு முழுவதும் புதிதாக அமைக்கப்படவுள்ள 1,000 'ஆரோக்கிய' (Arogya) மையங்கள் மூலம் குடும்பங்களுக்கு முதன்மை பராமரிப்பு மருத்துவர் (Primary-care doctor) வசதி ஏற்படுத்தித் தரப்படவுள்ளது.
இதற்கமைய, நோயாளர்கள் பெரிய மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டுமாயின், முதன்மையாகத் தங்களது குடும்ப மருத்துவரின் பரிந்துரையைப் பெறுவது கட்டாயமாக்கப்படவுள்ளது.
தற்போதைய சுகாதார அமைப்பு முறைமை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவிக்கையில்:
"கொத்தமல்லி குடித்து ஓய்வெடுத்தாலே குணமாகக்கூடிய நோயாக இருந்தால், வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்க வேண்டும். மருந்து எழுதிக் கொடுக்கப்பட்டால் அதைச் சரியாக உட்கொள்ள வேண்டும்.
ஆனால், இலவசமாக வழங்கப்பட்ட மருந்துகளைக் கூட மக்கள் முழுமையாக உட்கொள்வதில்லை. இது பெரும் வீணடிப்பாகும்; ஒரு குற்றமுமாகும்" எனச் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் சுமார் 2.2 கோடி மக்கள் தொகை மட்டுமே உள்ள நிலையில், அரச மருத்துவமனைஆண்டுதோறும் சுமார் 8 கோடி (80 மில்லியன்) வெளிநோயாளர் வருகைகள் பதிவாவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, முறையான ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்குக் காரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.
Latest News
நான் போர்க் குற்றவாளியல்ல, ஆதாரத்துடன் நிரூபித்தால் ஏற்றுக்கொள்ள தயார் – சவேந்திர சில்வா
Local
08 September 2026
விஜய்யின் 'சுறா' பட நகைச்சுவைக் காட்சி - வைரலாகும் உதயநிதியின் இன்ஸ்டாகிராம் பதிவு
Local
08 September 2026
உயர் நீதிமன்றின் வியாக்கியானத்தை சபாநாயகர் இந்த வாரம் அறிவிப்பார் என எதிர்பார்ப்பு!
Local
08 September 2026
அமெரிக்கா - ஈரான் போரினால், எண்ணெய் விலையில் பாரிய அதிகரிப்பு
Local
08 September 2026
நாடாளுமன்றம் வர நாமலுக்கு அனுமதி!
Local
08 September 2026
“பாதி உள்ளே, பாதி வெளியே முடியாது”: ஹரி மற்றும் மேகன் நிலை குறித்த மன்னர் சார்லஸின் கடிதம் !
Local
08 September 2026
மேற்குக் கரைப் பாடசாலைகளில் பாலஸ்தீன பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள அச்சமும் வன்முறையும்!
Local
08 September 2026
பாகிஸ்தானிய கிரிக்கெட் வீராங்கனைக்கு அபராதம் விதிப்பு!
Local
08 September 2026
ஈரானின் உள்நாட்டு நிலவரம் மற்றும் மோதல்கள்!
Local
08 September 2026
கனேடிய வானுார்திகளை அமெரிக்காவில் தயாரிக்குமாறு அறிவித்துள்ள ட்ரம்ப்!
Local
08 September 2026