General07 September 2026

யோஷித ராஜபக்ச தாக்கல் செய்த மேன் முறையீட்டு மனுவைத் திரும்பப்பெறுவதற்கு அனுமதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச , நிதித் தூய்தாக்கல் வழக்கு தொடர்பில் தாக்கல் செய்திருந்த சிறப்பு மேன்முறையீட்டு மனுவை திரும்பப் பெறுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையைத் தடுக்கும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் தள்ளுபடி செய்திருந்தது.

அந்த உத்தரவுக்கு எதிராகவே யோஷித ராஜபக்சவினால் இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதேவேளை, எதிர்காலத்தில் தேவைப்படின் இது தொடர்பான விவகாரத்தை மீண்டும் மேன்முறையீடு ஒன்றின் மூலம் முன்வைப்பதற்கான உரிமையையும் அனுமதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes