General09 September 2026

தலவத்துகொடை கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது

தலவத்துகொட பகுதியில் வானூர்தி பயணச்சீட்டு மற்றும் விசா வழங்கும் நிறுவனமொன்றில் இடம்பெற்ற, 6 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் தங்கப் பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முல்லேரியாவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கொள்ளைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிற்றூந்து ஒன்று சந்தேகநபரின் வீட்டிலிருந்து காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த முதலாம் திகதி நான்கு பேர் கொண்ட குழுவொன்று, நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை கூர்மையான ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி, இந்தக் கொள்ளை சம்பவத்தை மேற்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes