General10 September 2026

அடக்குமுறைகள் மூலம் எமது போராட்டத்தை நிறுத்த முடியாது - நாமல் எச்சரிக்கை

நாடாளுமன்றத்தின் இரண்டு முன்வரிசை ஆசனங்களில் அமர்ந்திருக்கும் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரே, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடிக்குப் பின்னால் இருக்கக்கூடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர்களின் அறிவின்றி இவ்வளவு பெரிய தொகையானது தவறான வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருக்க முடியாது என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், அந்த விநியோக நடவடிக்கைகள் எவ்வாறு இவ்வளவு விரைவாக முடிக்கப்பட்டன எனவும் அவர் இதன்போது வினவினார்.

இதனிடையே, தமது கட்சியின் பேரணியை நடத்துவதற்காகக் கோரப்பட்ட மைதானம் தமக்கு மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அடக்குமுறைகள் மூலம் எமது போராட்டத்தை நிறுத்த முடியாது எனவும் குறிப்பிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes