General14 September 2026

யால தேசிய பூங்காவின் இரு மண்டலங்கள் தற்காலிகமாக மூடப்படும் - வனஜீவராசிகள் திணைக்களம்

யால தேசிய பூங்காவின் முதலாம் மற்றும் இரண்டாம் மண்டலங்கள் இன்று (14) முதல் எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும் என வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவி வரும் வறட்சியான வானிலை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தேசிய பூங்காவின் ஏனைய மண்டலங்கள் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டிருக்கும் என பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes