கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில், தெல்கந்த சந்திக்கு அருகில் சிவப்பு போக்குவரத்து சமிக்ஞையை சட்டவிரோதமான முறையில் மீறிச் சென்றதாகக் கூறப்படும் பேருந்தின் சாரதிக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த செப்டெம்பர் 12ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
குறித்த காணொளியில், போக்குவரத்து சமிக்ஞை சிவப்பு நிறத்தில் காணப்பட்டபோது, பேருந்து அந்தச் சந்தியின் இடதுபுறமுள்ள வீதிக்குள் திருப்பப்பட்டுள்ளது.
பின்னர், பிரதான வீதியில் உள்ள சிவப்பு சமிக்ஞையைத் தவிர்த்து குறுக்கு வீதி வழியாகச் சென்று மீண்டும் பிரதான வீதியில் இணையும் வகையில் பேருந்து செலுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பேருந்தின் உரிமையாளர் மிரிஹான போக்குவரத்துக் காவல் பிரிவுக்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இதன்போது, சம்பவம் இடம்பெற்ற வேளையில் பேருந்தைச் செலுத்திய சாரதியை மூன்று நாட்களுக்குள் காவல் நிலையத்தில் முன்னிலைப்படுத்துமாறு பேருந்தின் உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன், குறித்த சாரதி போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளாரா? என்பதைக் கண்டறிவதற்காக, போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் சாரதியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Latest News
நாட்டில் கடந்த ஆண்டில் வேலையின்மை விகிதம் 3.9 வீதமாகப் பதிவு
Local
16 September 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
Local
16 September 2026
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு ஒக்டோபருக்கு ஒத்திவைப்பு!
Local
16 September 2026
கலகொடஅத்தே ஞானசார தேரரின் வழக்கு மீண்டும் இந்த மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
Local
16 September 2026
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராச்சி, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை
Local
16 September 2026
நேரலையில் கோர விபத்து : அமெரிக்காவில் செய்தி நிறுவன உலங்கு வானூர்தி விழுந்து நொறுங்கி 3 பேர் உயிரிழப்பு!
Local
16 September 2026
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் ஷிராந்தி ராஜபக்ச சிங்கப்பூர் பயணம்
Local
16 September 2026
எல் நினோ தாக்கம் : அடுத்த 2 மாதங்களில் இலங்கைக்கு காத்திருக்கும் மிகப்பெரிய காலநிலை மாற்றம்!
Local
16 September 2026
மீண்டும் டெங்கு தலைதூக்கலாம் -விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Local
16 September 2026
மெக்காவை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஆளில்லா வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது : சவூதி கூட்டுப்படை விளக்கம்!
Local
16 September 2026