Entertainment01 August 2026

சீதைக்குப் பின்னால் ஒரு தேவதை: இணையத்தில் வைரலாகும் அடையாளம் தெரியாத பெண்!

ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் "ராமாயணா".

இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 29 ஆம் திகதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தநிலையில் ராமாயண் பட ட்ரெய்லரில் ரன்பீர் கபூர், யாஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளத்தைத் தாண்டி, சீதைக்குப் பின்னால் நிற்கும் பெண்ணின் முகம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அந்தப் பெண் யார் என ஆராய்ந்த ரசிகர்கள், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுரபி தாஸ் என்ற நடிகைதான் அவர் எனக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தநிலையில் குறித்த பெண்ணுக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளதுடன் அவரின் நிழற்படம் வைரலாகி வருகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes