Entertainment23 August 2026

தொடருந்து நிலைய அதிகாரியான பூனை! மும்பை மெட்ரோவின் வைரல் 'தலைமைப் பூனை அதிகாரி'!

மும்பை மெட்ரோவின் குண்டாவலி (Gundavali) தொடருந்து நிலையத்திற்கு தினமும் ஒரு செம்மஞ்சல் நிறப் பூனை வழக்கமாக வந்து செல்வதை பயணிகள் கவனித்து வருகின்றனர்.

அங்கிருக்கும் தளங்கள் மற்றும் நுழைவு வாயில்களில் ஓய்வெடுக்கும் இந்தப் பூனை, பயணிகள் மற்றும் மெட்ரோ ஊழியர்களின் பெரும் அன்பையும் பெற்றுள்ளது.

இந்தநிலையில் சந்தேஷ் (Sandesh) என்ற மெட்ரோ பயணி ஒருவர், இந்த பூனைக்கு மெட்ரோ நிர்வாகம் ஏதாவது ஒரு கௌரவப் பொறுப்பை வழங்க வேண்டும் என சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை ஏற்ற மும்பை மெட்ரோ (MMOPL) நிர்வாகம், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில், அந்த பூனைக்கு ‘தலைமைப் பூனை அதிகாரி’ (Chief Cat Officer - CCO) என்ற கௌரவப் பட்டத்தை வழங்குவதாக நகைச்சுவையாகவும் நெகிழ்ச்சியாகவும் அறிவித்துள்ளது.

இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், "தொடருந்து நிலையத்தின் பாதுகாப்பையும் அமைதியையும் மேற்பார்வையிடும் சிறப்பு அதிகாரி" எனப் பயணிகள் இந்த புதிய 'அதிகாரியை' செல்லமாக அழைத்து மகிழ்ந்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes