இரண்டு மணி நேரத்திற்குள் மரதன் ஓட்டத்தை நிறைவு செய்த உலகின் சாதனைக் வீரரான செபஸ்டியன் சாவே (Sebastian Sawe), காயம் காரணமாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள பெர்லின் மரதன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்த மரதன் செப்டம்பர் 27 அன்று பெர்லினில் நடைபெறவுள்ளது.
இதுவே, கடந்த ஏப்ரல் மாதம் லண்டன் மரதனில் 1 மணி 59 நிமிடம் 30 விநாடிகளில் இலக்கைக் கடந்து உலக சாதனை படைத்ததன் பின்னர், சாவேயின் முதல் பந்தயமாக இருந்தது.
எனினும் , "காயம் காரணமாக பெர்லின் மரதனில் இருந்து தாம் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று , 31 வயதான கென்யா நாட்டைச் சேர்ந்த சாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பெர்லின் மரதனின் தட்டையான பாதை உலக சாதனைகளுக்குப் பெயர் பெற்றது. கடந்த 2025 பெர்லின் மரதன் போட்டியில் கடும் வெப்பத்தையும் தாண்டி 2:02:16 மணி நேரத்தில் சாவே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Latest News
திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினரான வெல்லே சாரங்க எனப்படும் சாரங்க பிரதீப் துபாயில் கைது
Local
29 August 2026
“பங்கேற்க மாட்டோம்” - இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அதிரடி முடிவு!
Local
29 August 2026
62 ஆவது பிறந்தநாளில் 62 புடவைகளைப் பரிசளித்து நடிகை நளினியை நெகிழ வைத்த சகோதரன்!
Local
29 August 2026
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் தமிழ் முன்னோட்டம் வெளியானது!
Local
29 August 2026
மு.க.ஸ்டாலினுக்கான பாதுகாப்பைக் குறைத்தது தமிழக அரசு!
Local
29 August 2026
கீழ் மல்வத்து ஓயா திட்டப் பணிகளை விரைவுபடுத்த பணிப்புரை!
Local
29 August 2026
இலவச சுகாதார சேவையை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசியல் சதி: GMOA எச்சரிக்கை!
Local
29 August 2026
கடத்தப்பட்ட பெண்ணுடன் தப்ப முயன்ற சிற்றூந்து மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு!
Local
29 August 2026
நேபாள வெள்ளப்பெருக்கு: வெள்ளத்திற்கு இடையே உறுதியாக நின்ற பச்சை நிற வீடு !
Local
29 August 2026
இலங்கைக்கு அருகில் ஈரானியக் கப்பல்கள்: அரசாங்கம் தீவிர அவதானம்!
Local
29 August 2026