General01 May 2026

விஜயவாடாவில் அதிர்ச்சி: 18 மாத பெண் குழந்தையை சுவரில் வீசிய நபர் கைது

விஜயவாடாவைச் சேர்ந்த தம்பதியினருக்கு 5 வயது மகனும், 18 மாத பெண் குழந்தையும் இருந்தனர். கணவரின் நண்பரான வம்சி, அடிக்கடி அந்த வீட்டிற்கு வந்து சென்றதன் விளைவாக, பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

வம்சி மற்றொரு பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தார். கணவரிடம் தன் தாய் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு, அந்தப் பெண் வம்சியின் அறைக்குச் சென்று இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அந்தப் பெண் தனது குழந்தையுடன் வம்சியின் அறைக்குச் சென்றபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த வம்சி, பெண்ணிடம் இருந்த 18 மாத பெண் குழந்தையைப் பறித்து சுவற்றில் வேகமாக வீசினார். இதில் பலத்த காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், மாமியாரிடம் குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். ஆனால், தெளிவற்ற பதிலை அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் குழந்தை எங்கே என்று விஜயவாடா முழுவதும் தேடிப் பார்த்தனர்.

கடைசியில், வம்சி இறந்த குழந்தையுடன் குளக்கரை அருகே நிற்பதைக் கண்ட குடும்பத்தினர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வம்சியைக் கைது செய்து, குழந்தையின் உடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களது உறவுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes