நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரி பல்லேகலை சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க இந்த இடமாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 6 ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் சிலர் சிறைச்சாலையின் இறுதி கதவை உடைத்து தப்பிச் செல்ல முற்பட்ட போது, நிலைமையைக் கட்டுப்படுத்த குறித்த அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, கைதிகள் குழுவினர் சிறைச்சாலை அதிகாரிகள் மீது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தாக்குதல் நடத்தியதாகவும், சக அதிகாரிகளின் உயிரைப் பாதுகாக்கவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் அந்த அதிகாரி துப்பாக்கியைப் பயன்படுத்தியதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், இந்தத் துப்பாக்கிச் சூடு சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டதா மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஏதேனும் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற இந்த வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட மோதல்களில், 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க இந்த இடமாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 6 ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் சிலர் சிறைச்சாலையின் இறுதி கதவை உடைத்து தப்பிச் செல்ல முற்பட்ட போது, நிலைமையைக் கட்டுப்படுத்த குறித்த அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, கைதிகள் குழுவினர் சிறைச்சாலை அதிகாரிகள் மீது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தாக்குதல் நடத்தியதாகவும், சக அதிகாரிகளின் உயிரைப் பாதுகாக்கவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் அந்த அதிகாரி துப்பாக்கியைப் பயன்படுத்தியதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், இந்தத் துப்பாக்கிச் சூடு சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டதா மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஏதேனும் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற இந்த வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட மோதல்களில், 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
பொதுமக்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!
Local
15 July 2026
புகையிலை உள்ளடங்கிய வெற்றிலை விற்பனைக்கு விரைவில் தடை!
Local
15 July 2026
கட்டுமானத்துறை நிபுணர்களுக்கான தேவை அதிகரிப்பு: பிரதி அமைச்சர் தகவல்!
Local
15 July 2026
துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரி பல்லேகலைக்கு தற்காலிகமாக இடமாற்றம்
Local
15 July 2026
அதிகாரிக்கான மிரட்டலே சிறைச்சாலை வன்முறையின் ஆரம்பப் புள்ளி! சிஐடி சமர்ப்பித்த முழு அறிக்கை!
Local
15 July 2026
சிகரெட் வரி குறைப்பால் ரூ.25 பில்லியன் வருமான இழப்பு: வெரிட்டே ரிசர்ச் தகவல்
Local
15 July 2026
பிரான்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவானது ஸ்பெயின்!
Local
15 July 2026
கடல்வழி முற்றுகை மீண்டும் அமுலானது - 20 போர்க்கப்பல்கள் களத்தில்: ஈரான் மீது புதிதாக தாக்குதல்கள்!
Local
15 July 2026
தாதியர்களின் ஓய்வு வயது வரம்பை 2 வருடங்களால் நீடிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை!
Local
15 July 2026
மோசடியாளர்களிடமே வங்கிக் கணக்கை உறுதிப்படுத்திய அதிகாரிகள்! - நாடாளுமன்ற அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
Local
15 July 2026