Entertainment11 July 2026

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய 'சிறுத்தை' பேபி ரக்ஷனா... வைரலாகும் புகைப்படங்கள்!

இயக்குநர் சிவா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'சிறுத்தை'. இந்தப் படத்தில் தமன்னா, சந்தானம், கார்த்தியுடன் இணைந்து நடித்திருந்தனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஆனது. இந்தப் படத்தின் வெற்றியால் இன்று வரை இயக்குநர் சிவா 'சிறுத்தை சிவா' என்றுதான் அழைக்கப்படுகிறார்.

பேபி ரக்ஷனா இந்தப் படத்தில் கார்த்தியின் மகளாக பேபி ரக்ஷனா என்பவர் நடித்திருந்தார். 'அராராரோ ஆரிரரோ' பாடலில் அவருடைய நடிப்பு ரசிகர்களின் மனதை தொட்டது. இந்த நிலையில், சிறுத்தை திரைப்படத்தில் கார்த்தியின் மகளாக நடித்திருந்த பேபி ரக்ஷனாவின் சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் நன்றாக வளர்ந்து ஆளே மாறிவிட்டார் நடிகை ரக்ஷனா.

இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும், 'சிறுத்தை படத்தில் நடித்த குழந்தையா இது?' என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.

தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வரும் ரக்ஷனா, பரதநாட்டியமும் கற்று வருகிறார்.

'சிறுத்தை' படத்திற்குப் பிறகு மணிரத்னத்தின் 'கடல்', 'ஓ காதல் கண்மணி' போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes