தமிழ்நாட்டின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கை தலைமன்னார் வரை பாக்கு நீரிணையை கடந்து வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் நீச்சல் பயணத்தை மேற்கொள்வதற்கு அனுமதி கோரிய மனு குறித்து, மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திருச்சியைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையான தனுஜா என்பவர் தாக்கல் செய்த மனுவிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது மனுவில் "இலங்கை உள்நாட்டுப் போரின்போது குழந்தையாக நான் இந்தியாவுக்குக் அழைத்து வரப்பட்டேன். தற்போது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் முகாமற்ற இலங்கை ஏதிலியாக பதிவு செய்யப்பட்டு வசித்து வருகிறேன்.
நான் ஒரு நீச்சல் வீராங்கனை என்பதால், தமிழ்நாட்டின் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை பாக்கு நீரிணையை கடந்து வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் நீச்சல் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன்.
இதற்கான அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், என்னிடம் கடவுச்சீட்டு இல்லை என்ற காரணத்தைக் கூறி அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, எனது நீச்சல் பயணத்துக்குத் தேவையான அனுமதியை வழங்குமாறு உத்தரவிட வேண்டும்" என்று அவர் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
திருச்சியைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையான தனுஜா என்பவர் தாக்கல் செய்த மனுவிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது மனுவில் "இலங்கை உள்நாட்டுப் போரின்போது குழந்தையாக நான் இந்தியாவுக்குக் அழைத்து வரப்பட்டேன். தற்போது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் முகாமற்ற இலங்கை ஏதிலியாக பதிவு செய்யப்பட்டு வசித்து வருகிறேன்.
நான் ஒரு நீச்சல் வீராங்கனை என்பதால், தமிழ்நாட்டின் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை பாக்கு நீரிணையை கடந்து வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் நீச்சல் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன்.
இதற்கான அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், என்னிடம் கடவுச்சீட்டு இல்லை என்ற காரணத்தைக் கூறி அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, எனது நீச்சல் பயணத்துக்குத் தேவையான அனுமதியை வழங்குமாறு உத்தரவிட வேண்டும்" என்று அவர் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
Latest News
மெக்சிகோவில் கால்பந்து வெற்றி கொண்டாட்ட நெரிசலில் சிக்கி மூவர் மூச்சுத்திணறி பலி!
Local
02 July 2026
காவல்துறை உத்தியோகத்தருக்கு 2 மணிநேர சிறை!
Local
02 July 2026
யாழ். மாநகர சபை புதிய கட்டடப் பணிகளுக்காக சுமார் ரூ. 1,958 மில்லியன் - அமைச்சரவை அனுமதி!
Local
02 July 2026
இலங்கை ஏதிலியின் பாக்கு நீரிணை நீச்சல் பயணம்: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
Local
02 July 2026
பாகிஸ்தான், கட்டார் அதிகாரிகளுடனான அமெரிக்க ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததாக ஈரான் கூறுகிறது
Local
02 July 2026
அமேசான் ஊழியர் ட்ரம்ப் உருவ பொம்மையின் தொப்பியை அகற்றியதாக சர்ச்சை
Local
02 July 2026
இலங்கையில் இன்னும் டெங்கு பரவுகிறது - 24 மணிநேரத்தில் 1217 நோயாளர்கள்!
Local
02 July 2026
வவுனியா முன்னாள் முதல்வர் உள்ளிட்ட நால்வரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
Local
02 July 2026
கொங்கோவின் ஆரம்ப அதிர்ச்சி – மீண்டெழுந்து இங்கிலாந்து திரில் வெற்றி!
Local
01 July 2026
ஸ்ரீசாந்த் மீதான 3 ஆண்டு தடையை கேரள கிரிக்கெட் சங்கம் நீக்கியது
Local
01 July 2026