International06 July 2026

ஈரானின் மறைந்த உச்சத் தலைவரின் இறுதிச்சடங்கில் எதற்காக சிவப்பு கொடிகள்?

ஈரானின் மறைந்த முன்னாள் உச்சத் தலைவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு துக்கத்தை வெளிப்படுத்தியவர்கள் பழிவாங்கலை அடையாளப்படுத்தும் ஷியா அடையாளமான சிவப்பு நிறப் பதாகைகள் மற்றும் கொடிகளைப் பரவலாகக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

தெஹ்ரானின் கிராண்ட் மொசல்லா வளாகம் முழுவதும் "யா லதாராத் அல்-ஹுசைன்" (ஹுசைனைப் பழிவாங்குபவர்களே) மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட "யா லதாராத் அல்-கமேனி" (கமேனியைப் பழிவாங்குபவர்களே) போன்ற முழக்கங்கள் எழுதப்பட்ட சிவப்பு நிறக் கொடிகள் காணப்பட்டன.

இதில் பிந்தைய முழக்கமானது, கி.பி 680 இல் கர்பலாவில் முஹம்மது நபியின் பேரனான இமாம் ஹுசைன் படுகொலை செய்யப்பட்டதன் நினைவேந்தலையும் கமேனியின் மரணத்தையும் ஒன்றிணைப்பதாக அமைந்துள்ளது.

இமாம் ஹுசைனின் மரண நினைவேந்தலானது ஷியா பிரிவினரின் அடையாளத்தின் மையப்பகுதியாகவும், ஒடுக்குமுறை மற்றும் கொடுங்கோன்மைக்கு எதிரான எதிர்ப்பின் சின்னமாகவும் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.

வரலாற்று ரீதியாக "யா லதாராத் அல்-ஹுசைன்" என்ற முழக்கம் ஷியா போராளிகளைப் பழிவாங்கும் தாக்குதல்களுக்காக அணிதிரட்டப் பயன்படுத்தப்பட்ட ஒன்றாகும்.

தற்போது அந்த முழக்கம் கமேனியின் பெயருடன் மாற்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளமை, அவரைக் கொன்றவர்களுக்கு எதிராக நேரடியாகப் பழிவாங்குவதற்கான அழைப்பாகவே பார்க்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes