General15 July 2026

கட்டுமானத்துறை நிபுணர்களுக்கான தேவை அதிகரிப்பு: பிரதி அமைச்சர் தகவல்!

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் துரித அபிவிருத்தித் திட்டங்கள் காரணமாக, கட்டுமானத்துறையில் தொழில் நிபுணர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.

நிலவும் கடும் தொழில் நிபுணர்களுக்கான தட்டுப்பாடு காரணமாக, எதிர்வரும் ஆண்டில் கட்டுமானத்துறையில் 10,000க்கும் மேற்பட்ட தொழில் நிபுணர்களை வெளிநாடுகளில் இருந்து வரவழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் இறுதியிலும் அடுத்த ஆண்டின் ஆரம்பத்திலும் ஆரம்பிக்கப்படவுள்ள பிரம்மாண்ட அபிவிருத்தித் திட்டங்களுக்காக, வெல்டிங் நிபுணர்கள் மற்றும் மின்னியலாளர்கள் போன்ற திறமையான பணியாளர்களைக் கண்டறிவது தற்போது சவாலாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற பிராந்திய நாடுகளைக் காட்டிலும், தெற்காசியாவில் மிக வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடாக இலங்கை மாறியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes