International15 July 2026

பொதுமக்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!

பிராந்தியம் முழுவதும் பொதுமக்கள் மீது ஈரான் திட்டமிட்டுத் தாக்குதல்களை நடத்துவதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஈரான் படைகள் ஏழு வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல்களில் பொது மகன்களான சுமார் 12 பணியாளர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அண்டை வளைகுடா நாடுகளை நோக்கி ஈரான் பல ஏவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் ஏவியுள்ளதாகத் தெரிவித்த அட்மிரல் கூப்பர், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய செயல்களுக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய செயற்பாடுகளுக்காக ஈரான் படைகளை அமெரிக்கா பொறுப்புக்கூறச் செய்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes