International17 July 2026

யுக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்: தெருக்களில் இறங்கி போராடும் மக்கள்

யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, அந்தநாட்டு பாதுகாப்பு அமைச்சர் மைக்ஹெய்லே ஃபெடோரோவை திடீரென பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

இந்த முடிவு யுக்ரைன் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, ஜனாதிபதியின் பதவிக்காலத்திலேயே எடுக்கப்பட்ட "மிக மோசமான தவறு" என விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்த பதவி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் கிய்வ் மற்றும் நாட்டின் ஏனைய நகரங்களில் இளைஞர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வீதிகளில் இறங்கிப்"ஃபெடோரோவை தொடாதே!", "வெற்றியை சீர்குலைப்பதை நிறுத்து!" போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யுக்ரைன் இராணுவத் தலைமைத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஃபெடோரோவ் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான அதிகாரப் போட்டியே இந்த பதவி நீக்கத்திற்குக் காரணம் என்பது உறுதியாகியுள்ளது.

ஃபெடோரோவுக்குப் பதிலாக, யுக்ரைன் பாதுகாப்புச் சேவையின் தற்காலிகத் தலைவரான மேஜர் ஜெனரல் யெவ்ஹேனி பிமாரா என்பவரை தற்காலிக பாதுகாப்பு அமைச்சராக ஸெலென்ஸ்கி நியமித்துள்ளார். இதற்கிடையில், யுக்ரைனின் புதிய பிரதமராக செர்ஜி முராவியெவ் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes