General04 August 2026

தென் கடற்பகுதியில் மிதக்கும் 15 கொள்கலன்கள்: கடற்றொழிலாளர்கள் அவதானம்!

இரண்டு நாட்களுக்கு முன்பு கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் கடலில் வீழ்ந்த 17 வெற்று கொள்கலன்களில் இதுவரை இரண்டு மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 15 கொள்கலன்கள் தற்போதைய கடல் நீரோட்டத்தின் காரணமாக கொஸ்கொட, காலி, ரத்கம மற்றும் மாத்தறை உள்ளிட்ட தென் கடற்பகுதிகளை நோக்கி மிதந்து செல்லக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த மிதக்கும் கொள்கலன்களுடன் மீன்பிடிப் படகுகள் மோதினால் கடுமையான விபத்துகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதால், தென் கடற்பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடிப் படகுகள் உட்பட அனைத்து கடற்றொழிலாளர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான கொள்கலன்கள் எதனையும் காணும் பட்சத்தில் உடனடியாக கடற்றொழில் திணைக்களத்திற்கு தகவல் வழங்குமாறும் பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes