அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் ( கோப் குழு) கூட்டத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட கட்டுமானப் தொழில்துறை அபிவிருத்தி அதிகார சபையின் (CIDA) அதிகாரிகள் இருவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளதாகவும், அந்த மன்னிப்பை ஒழுக்கநெறி மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் கூட்டத்தில், குறித்த அதிகார சபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறன் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.
இதன்போது அதன் பணிப்பாளர் சபையைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் நடத்தை குறித்து கவலைகள் எழுந்ததாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, அதிகாரி ஒருவர் நாடாளுமன்றக் குழுக்களின் முன் முன்னிலையாவதற்குரிய உரிய ஆடை விதிமுறைகளை பின்பற்றாமல் வருகை தந்துள்ளார். மேலும், அவ்விரு அதிகாரிகளும் கோப் குழுத் தலைவரின் முன்அனுமதியைப் பெறாமல் கூட்டத்தின் நடுவே வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவரால் எழுப்பப்பட்ட சிறப்புரிமைப் பிரச்சினையைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த இரு அதிகாரிகளும் கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி ஒழுக்கநெறி மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த விசாரணைகளின் போது, தங்களின் செயலின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அதிகாரிகள் இருவரும் தங்களின் மனமார்ந்த மன்னிப்பைத் தெரிவித்துக் கொண்டதாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுக்களின் அதிகாரம், கண்ணியம் மற்றும் வழிமுறைகளை மதிப்பதன் முக்கியத்துவத்தை அதிகாரிகள் உணர்ந்து கொண்டதைக் கருத்திற் கொண்டு, குழுவின் தலைவருடன் இணைந்து ஒழுக்கநெறி மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுக்களின் முன் முன்னிலையாகும் அனைத்து நபர்களும் எப்போதும் மிக உயர்ந்த ஒழுக்கத் தரத்தைப் பேண வேண்டும் என்றும், நாடாளுமன்ற நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் கூட்டத்தில், குறித்த அதிகார சபையின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறன் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.
இதன்போது அதன் பணிப்பாளர் சபையைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் நடத்தை குறித்து கவலைகள் எழுந்ததாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, அதிகாரி ஒருவர் நாடாளுமன்றக் குழுக்களின் முன் முன்னிலையாவதற்குரிய உரிய ஆடை விதிமுறைகளை பின்பற்றாமல் வருகை தந்துள்ளார். மேலும், அவ்விரு அதிகாரிகளும் கோப் குழுத் தலைவரின் முன்அனுமதியைப் பெறாமல் கூட்டத்தின் நடுவே வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவரால் எழுப்பப்பட்ட சிறப்புரிமைப் பிரச்சினையைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த இரு அதிகாரிகளும் கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி ஒழுக்கநெறி மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் முன் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த விசாரணைகளின் போது, தங்களின் செயலின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அதிகாரிகள் இருவரும் தங்களின் மனமார்ந்த மன்னிப்பைத் தெரிவித்துக் கொண்டதாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுக்களின் அதிகாரம், கண்ணியம் மற்றும் வழிமுறைகளை மதிப்பதன் முக்கியத்துவத்தை அதிகாரிகள் உணர்ந்து கொண்டதைக் கருத்திற் கொண்டு, குழுவின் தலைவருடன் இணைந்து ஒழுக்கநெறி மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழு அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுக்களின் முன் முன்னிலையாகும் அனைத்து நபர்களும் எப்போதும் மிக உயர்ந்த ஒழுக்கத் தரத்தைப் பேண வேண்டும் என்றும், நாடாளுமன்ற நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.
Latest News
கோல்டன் குளோப் விருது வென்ற ஹொலிவுட் நடிகை ரொசமண்ட் பைக் இலங்கைக்கு விஜயம்
Local
08 August 2026
எது நடந்தாலும் “இது நாமலின் வேலைதான்” என குற்றம்சாட்ட அரசாங்கம் முயல்கிறது!
Local
08 August 2026
இலங்கைத் தொடருக்காக சாய் சுதர்சனுக்குப் பதிலாக இருவர் பரிசீலனை!
Local
08 August 2026
கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி காலமானார்!
Local
08 August 2026
மிக நீண்ட கூந்தல்: கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்!
Local
08 August 2026
கொண்டைக்கடலைக்கு தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லி வாயுவை சுவாசித்த இரு சிறுமிகள் உயிரிழப்பு
Local
08 August 2026
சக வீராங்கனையுடன் தொடர்பு: அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி துணைத் தலைவி மீது முன்னாள் மனைவி பகிரங்கக் குற்றச்சாட்டு!
Local
08 August 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
Local
08 August 2026
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து சாய் சுதர்சன் விலகல்!
Local
08 August 2026
பாகிஸ்தானில் கடுமையாக உயரும் பொருட்கள் விலை: அரசாங்கத்துக்கு எதிராக வலுக்கும் மக்கள் போராட்டம்
Local
08 August 2026