இலங்கையில் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை "விரைவில்" நடத்த வேண்டும் என்றும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் அரசியலமைப்பு விதிகளை "முழுமையாக அமுல்படுத்த" வேண்டும் என்றும் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியின் இலங்கை விஜயத்தின் போது இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், 'டிட்வா' (Ditwah) சூறாவளிப் பாதிப்பில் இருந்து இலங்கை மீள்வதற்கான இந்தியாவின் உதவிகள், எரிசக்தித் துறையிலான ஒத்துழைப்புகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்துதல் ஆகியவை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் அடையாளத் திட்டம், திருகோணமலை மாவட்டத்தை எரிசக்தி மையமாக உருவாக்குதல் மற்றும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்கி புனரமைத்தல் உள்ளிட்ட இந்திய நிதியுதவியிலான திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவது குறித்தும் மீனவர் பிரச்சினைகள் தொடர்பிலும் இரு தரப்பும் ஆராய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, இரு நாடுகளுக்கும் பரஸ்பர பலன்களை அளிக்கும் வகையில் தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தே பேச்சுவார்த்தை அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
எனினும், மாகாண சபைத் தேர்தல் குறித்து எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெற்றதாக அதில் குறிப்பிடப்படவில்லை.
அத்துடன், போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் இந்தியாவின் ஆதரவையும் "முழு ஒத்துழைப்பையும்" ஜனாதிபதி கோரியதுடன், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் தமிழ் பேசும் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுக்கூட்டமைப்பு, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து வலியுறுத்தியிருந்த பின்னணியில் இந்தியாவும் இந்த விடயத்தில் அழுத்தம் கொடுத்துள்ளது.
நாட்டின் ஒன்பது மாகாண சபைகளின் பதவிக்காலமும் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் முடிவடைந்த போதிலும், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தேர்தலை காலம் தாழ்த்தி வருகின்றன.
2024 ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி ஆட்சிப் பொறுப்பேற்ற போது, அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியின் இலங்கை விஜயத்தின் போது இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், 'டிட்வா' (Ditwah) சூறாவளிப் பாதிப்பில் இருந்து இலங்கை மீள்வதற்கான இந்தியாவின் உதவிகள், எரிசக்தித் துறையிலான ஒத்துழைப்புகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்துதல் ஆகியவை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் அடையாளத் திட்டம், திருகோணமலை மாவட்டத்தை எரிசக்தி மையமாக உருவாக்குதல் மற்றும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்கி புனரமைத்தல் உள்ளிட்ட இந்திய நிதியுதவியிலான திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவது குறித்தும் மீனவர் பிரச்சினைகள் தொடர்பிலும் இரு தரப்பும் ஆராய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, இரு நாடுகளுக்கும் பரஸ்பர பலன்களை அளிக்கும் வகையில் தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தே பேச்சுவார்த்தை அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
எனினும், மாகாண சபைத் தேர்தல் குறித்து எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெற்றதாக அதில் குறிப்பிடப்படவில்லை.
அத்துடன், போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் இந்தியாவின் ஆதரவையும் "முழு ஒத்துழைப்பையும்" ஜனாதிபதி கோரியதுடன், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் தமிழ் பேசும் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுக்கூட்டமைப்பு, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து வலியுறுத்தியிருந்த பின்னணியில் இந்தியாவும் இந்த விடயத்தில் அழுத்தம் கொடுத்துள்ளது.
நாட்டின் ஒன்பது மாகாண சபைகளின் பதவிக்காலமும் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் முடிவடைந்த போதிலும், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தேர்தலை காலம் தாழ்த்தி வருகின்றன.
2024 ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி ஆட்சிப் பொறுப்பேற்ற போது, அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
பிரேசிலில் வானூர்தி விபத்துக்குள்ளாகி நால்வர் உயிரிழப்பு
Local
09 August 2026
அரசாங்கம் சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணிக்கிறது - நாமல் சாடல்
Local
09 August 2026
AI தொழில்நுட்பத்தால் வந்த வினை : இணையவாசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ருதி ஹாசனின் அதிரடி வழக்கு!
Local
09 August 2026
சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!
Local
09 August 2026
"அம்மா பற்றி ஜேசன் சஞ்சய் சொன்ன அந்த ஒரு விடயம்..." - இணையத்தில் வைரலாகும் நேர்காணல்!
Local
09 August 2026
15 வயதா? 18 வயதா? - வைபவ் சூர்யவன்சி குறித்து பிரெட் லீ கருத்து!
Local
09 August 2026
ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் ‘டொக்ஸிக்’ திரைப்பட ட்ரெய்லர்
Local
09 August 2026
மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு இன்டர் மியாமி வீரர் ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!
Local
09 August 2026
இரத்மலானை கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் - நான்கு பேர் கைது
Local
09 August 2026
பூமிக்கு மேலே ஒளிரும் பச்சை, சிவப்பு நிற அதிசயம் : ஐபோனில் எடுத்த அரிய பேரழகு!
Local
09 August 2026