அரசாங்கம் சரியான பாதையில் பயணிப்பதாகவும், நாட்டின் அபிவிருத்திப் பணிகள் மிக வேகமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நாட்டினுடைய சட்ட நடைமுறைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
சட்டம் அனைவருக்கும் சமமாகத் தனது கடமையைச் செய்யத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாகவே, கடந்த காலத்தில் ஊழல் செய்தவர்களும், குற்றமிழைத்தவர்களும், நாட்டைப் பாதாளத்திற்கு கொண்டு சென்றவர்களும் தற்போதைய அரசுக்கு எதிராகக் குரலெழுப்பி வருகின்றனர்.
எதிர்க்கட்சியில் உள்ள சிலர் மீது கடந்த காலத்தில் செய்யப்பட்ட குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
விசாரணை நிறைவடையும் பட்சத்தில், இன்னும் சில மாதங்களில் அவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை வரலாம்.
சிறைத் தண்டனைக்கு பயந்தே எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களையும், ஊடக சந்திப்புகளையும் நடத்தி குழப்பங்களை ஏற்படுத்த முயல்கின்றனர்.
ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் உட்பட அனைவரும் மிகவும் திட்டமாகவும் பலமாகவும் முன்னோக்கிச் செல்கின்றனர்.
தேசிய மக்கள் சக்தியை யாராலும் வீழ்த்த முடியாது.
மக்களை மையமாகக் கொண்டு நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் சக்தியாக தேசிய மக்கள் சக்தி தொடர்ந்து இயங்கும் என பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
Latest News
சினிமாவில் இருந்து திடீர் ஓய்வு? : சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் நடிகை சமந்தா!
Local
16 August 2026
கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் : காவல்துறை வெளியிட்ட அவசர அறிவிப்பு!
Local
16 August 2026
சர்வதேச கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்த ஸ்பெயின் கிரிக்கெட் அணி !
Local
16 August 2026
பிற்பகல் 2 மணிக்கு பின் வெளியே செல்வோரின் கவனத்திற்கு!
Local
16 August 2026
சாதனையாளன் விஜய்யை விட, சுதந்திர தின நிகழ்வில் பேசு பொருளாகிய நடிகை த்ரிஷா!
Local
16 August 2026
6 ஆண்டுகளில் 709 கைதிகள் தப்பி ஓட்டம் : பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - தீவிரமாகும் கண்காணிப்பு நடவடிக்கைகள்!
Local
16 August 2026
மரண தண்டனைக்கு முன்னர் நீதித்துறை சீர்திருத்தங்கள் அவசியம்: சிரேஷ்ட சட்டத்தரணி வலியுறுத்து!
Local
16 August 2026
பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள் எங்களுடனேயே வாழ விரும்புகிறார்கள்" – பாகிஸ்தான் ஜனாதிபதி பேச்சு!
Local
16 August 2026
இலங்கையில் மதுபானத்தால் ஏற்படும் பொருளியல் இழப்பு, வரி வருவாயை விட அதிகம்: ADIC சுட்டிக்காட்டு!
Local
16 August 2026
கொரியப் போரை உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவர வடகொரியாவுக்கு தென் கொரியா அழைப்பு!
Local
16 August 2026