நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பல பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
வீடுகள், மக்களின் வாழ்வாதாரங்கள், வீதிகள் மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதுடன், உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பாதுகாப்பான தங்குமிடங்களைத் தேடி இடம்பெயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அவசர உணவுப் பொருட்களை உலக உணவுத் திட்டம் ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளதுடன், தேவைகள் அதிகரிக்கும் பட்சத்தில் நிவாரண நடவடிக்கைகளை விரிவுபடுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், தேசிய அதிகாரிகளுடன் இணைந்து நிவாரணப் பணிகளுக்கான போக்குவரத்து மற்றும் விநியோக நடவடிக்கைகளிலும் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.
இதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடாரங்கள், அவசர மின்சார உற்பத்தி கருவிகள் மற்றும் மின்கலச் சேமிப்பு சாதனங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Latest News
ட்ரம்பின் பேச்சை வைத்து கோடிகளில் பந்தயம்: 172,000 டொலருக்கும் அதிகமான அபராதம் !
Local
30 August 2026
சேறும் சகதியுமாக மாறிவரும் இமயமலை எல்லைப் பகுதி : உயர் எச்சரிக்கையில் நேபாளம் !
Local
30 August 2026
நப்லூஸில் தொடரும் பதற்றம்: மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்டு பாலஸ்தீனியர்கள் முற்றுகை!
Local
30 August 2026
ஐஸ்லாந்தில் பரபரப்பான கட்டத்தை எட்டிய பொதுவாக்கெடுப்பு :ஐரோப்பிய ஒன்றிய இணைப்பு பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குமா?
Local
30 August 2026
இரவோடு இரவாக வெடித்து சிதறிய ஆயுதக்கிடங்கு : 37 பேர் உடலங்கள் மீட்பு 50 வீடுகள் தரைமட்டம்!
Local
30 August 2026
திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினரான வெல்லே சாரங்க எனப்படும் சாரங்க பிரதீப் துபாயில் கைது
Local
29 August 2026
“பங்கேற்க மாட்டோம்” - இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அதிரடி முடிவு!
Local
29 August 2026
62 ஆவது பிறந்தநாளில் 62 புடவைகளைப் பரிசளித்து நடிகை நளினியை நெகிழ வைத்த சகோதரன்!
Local
29 August 2026
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் தமிழ் முன்னோட்டம் வெளியானது!
Local
29 August 2026
மு.க.ஸ்டாலினுக்கான பாதுகாப்பைக் குறைத்தது தமிழக அரசு!
Local
29 August 2026