தமிழகத்திலுள்ள ஏதிலிகள் முகாம்களில் இருந்து கடல் வழியாகத் தலைமன்னார் பகுதிக்கு வந்தவர்கள் என நம்பப்படும் எட்டு பேர் கொண்ட குழுவினர், இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில், 2,11 மற்றும் 14 வயதுகளுடைய 3 சிறுவர்களும், 4 பெண்களும், ஆண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினரின் வழக்கமான கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, தலைமன்னார் கடற்பகுதியில் உள்ள மணல் திட்டு ஒன்றில் இவர்கள் தவிப்பதை இன்று (5) அதிகாலை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட கடற்படையினர், ஆபத்தில் சிக்கியிருந்த அவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்கியுள்ளனர்.
இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து வந்த இவர்கள், ஆட்கடத்தல் நடவடிக்கை ஒன்றுடன் தொடர்புடைய நபர்களால் நடுவழியில் கைவிடப்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தின் உள்ள ஆனையூர் மற்றும் ஒக்கூர் ஆகிய ஏதிலிகள் முகாம்களில் வசித்துவந்த நிலையில் தாயகம் திரும்பியவர்களாகக் கருதப்படும் இந்தக் குழுவினர் தற்போது கடற்படையினரின் பாதுகாப்பில் உள்ளனர்.
மேலதிக நடவடிக்கைகளுக்காக இவர்கள் விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்டவர்களில், 2,11 மற்றும் 14 வயதுகளுடைய 3 சிறுவர்களும், 4 பெண்களும், ஆண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினரின் வழக்கமான கடல் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, தலைமன்னார் கடற்பகுதியில் உள்ள மணல் திட்டு ஒன்றில் இவர்கள் தவிப்பதை இன்று (5) அதிகாலை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட கடற்படையினர், ஆபத்தில் சிக்கியிருந்த அவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்கியுள்ளனர்.
இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து வந்த இவர்கள், ஆட்கடத்தல் நடவடிக்கை ஒன்றுடன் தொடர்புடைய நபர்களால் நடுவழியில் கைவிடப்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தின் உள்ள ஆனையூர் மற்றும் ஒக்கூர் ஆகிய ஏதிலிகள் முகாம்களில் வசித்துவந்த நிலையில் தாயகம் திரும்பியவர்களாகக் கருதப்படும் இந்தக் குழுவினர் தற்போது கடற்படையினரின் பாதுகாப்பில் உள்ளனர்.
மேலதிக நடவடிக்கைகளுக்காக இவர்கள் விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Latest News
தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது
Local
07 September 2026
தாய்லாந்து செல்லும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவித்தல்
Local
07 September 2026
கேப் வெர்டெவின் போகோ தீவில் கோர விபத்து: பெரும்பாலான சிறுவர்கள் உட்பட்ட 25 பேர் பலி
Local
07 September 2026
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
Local
07 September 2026
பொதுப்பணத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் சிறை செல்வது நிச்சயம்- டில்வின் சில்வா எச்சரிக்கை
Local
07 September 2026
நிதிப் பற்றாக்குறையால் முடங்கிய சமூக சமையலறைகள்: காஸாவில் தீவிரப் பட்டினி!
Local
07 September 2026
ஒரே நாளில் இருவேறு விபத்துக்கள்: ஓடுதளத்தை விட்டு வெளியேறிய வானுார்தி: இடிபாடுகளில் சிக்கி மாணவர்கள் பலி!
Local
07 September 2026
60 குழந்தைகள் உட்பட 100 பாலஸ்தீனர்களின் எச்சங்களுக்கு இறுதிச்சடங்கு: உறைந்துபோன உறவினர்கள்!
Local
07 September 2026
பிஃபா தலைவர் தேர்தலில் மீண்டும் ஜியானி இன்ஃபான்டினோ போட்டி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Local
07 September 2026
ஹோர்முஸ் நீரிணையில் வெடித்த போர்: அமெரிக்கா - ஈரான் இடையே தீவிரமடையும் பலப்பரீட்சை!
Local
07 September 2026