வட மாகாண பாடசாலைகளில் 170 தகவல் தொழில்நுட்ப (ICT) ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது மொத்த ICT ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 31 சதவீத வெற்றிடமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தீவகம், தென்மராட்சி மற்றும் மடு ஆகிய கல்வி வலயங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமான ICT ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ICT ஆசிரியர் வெற்றிடங்கள் காரணமாக, பாடசாலைகளில் பழுதடையும் கணினிகள், ஸ்மார்ட் பலகைகள் மற்றும் மடிக்கணினிகளைப் பழுதுபார்ப்பதிலும், அவற்றுக்கான தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கைகளை வழங்குவதிலும் பெருமளவு தாமதம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், நடப்பு ஆண்டுக்குள் ஆசிரியர் வெற்றிடங்களில் 50 சதவீதத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
இதனிடையே, பாடசாலைகளில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள மின்னணு சாதனங்களை எரிப்பது அல்லது மண்ணில் புதைப்பது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவற்றை முறையாக மறுசுழற்சி செய்வதற்கான நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர், மின்னணுக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான தெளிவான நடைமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து கல்வித்துறைக்கான புதிய வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
Latest News
நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஜெனீவா நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் முறைப்பாடு!
Local
10 September 2026
4.62 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிலக்கரி எவ்வாறு மாயமானது ? - நாடாளுமன்றத்தில் நாமல் கேள்வி!
Local
10 September 2026
விஜய் மகளின் பெயரில் பரவும் புகைப்படங்கள்: சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் புதிய விவாதம் – உண்மையைத் தேடும் ரசிகர்கள்!
Local
10 September 2026
"குழந்தை பிறந்தால் வாழ்க்கையே மாறிவிடும்" – தாய்மை குறித்து சமந்தா!
Local
10 September 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார்!
Local
10 September 2026
ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி!
Local
10 September 2026
பாகிஸ்தானிலிருந்து போதைப்பொருள் கடத்தல் : விசாரணைகளில் குளறுபடியா? - காவல்துறை சிறப்பு விசாரணை ஆரம்பம்!
Local
10 September 2026
காப்புரிமை உத்தரவை மீறியதாக இளையராஜா மீது வழக்கு – டெல்லி உயர்நீதிமன்றம் அறிக்கை!
Local
10 September 2026
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு வருகை
Local
10 September 2026
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இன்று நுவரெலியாவில்
Local
10 September 2026