General14 September 2026

பக்தர்களை வியப்பில் ஆழ்த்திய 'வீர விநாயகர்': 51,000 உருத்திராக்கங்களால் பிரம்மாண்ட உருவாக்கம்!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 51,000 உருத்திராக்க மணிகளைக் கொண்டு 10 அடி உயரத்தில் பிரம்மாண்ட ‘வீர விநாயகர்’ சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டிப் பல்வேறு பகுதிகளில் விதவிதமான பொருட்களால் விநாயகர் சிலைகள் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் இந்த ஆண்டு பக்தர்களைக் கவரும் வகையில் முழுவதுமாக உருத்திராக்க மணிகளைப் பயன்படுத்தி இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

10 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த ‘வீர விநாயகர்’ சிலையைத் தயாரிப்பதற்காக மொத்தம் 51,000 உருத்திராக்க மணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மிக நுட்பமாகவும் கலைநயத்துடனும் உருவாக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலையை அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலரும் ஆர்வத்துடன் தரிசித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes