Entertainment20 August 2026

திருப்பதியில் மொட்டை அடித்த நயன்தாரா? – வைரலாகும் நிழற்படத்தின் பின்னணியில் உள்ள உண்மை!

நடிகை நயன்தாரா, ‘டொக்ஸிக்’ திரைப்படம் வெற்றிபெற வேண்டி திருப்பதியில் மொட்டை அடித்து சுவாமி தரிசனம் செய்ததாகக் கூறப்படும் சில நிழற்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

எனினும், இந்தச் செய்தி முற்றிலும் போலியானது எனத் தெரியவந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா திருப்பதிக்குச் சென்றபோது எடுக்கப்பட்ட உண்மையான நிழற்படம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிலரால் செம்மைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நயன்தாராவின் முகமும் உடையும் மாற்றப்படாமல், அவரது தலைமுடி மட்டும் நீக்கப்பட்டு இந்தப் போலியான நிழற்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில், நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்துள்ள ‘டொக்ஸிக்’ திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தத் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், விளம்பர நோக்கத்திற்காகவும் இணையத்தில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இவ்வாறான போலியான நிழற்படங்கள் பரப்பப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes