General21 June 2026

பருவநிலை மாற்றத்தால் ஆபத்தில் 1.8 பில்லியன் குழந்தைகள்: ஐநா எச்சரிக்கை!

பருவநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளால் உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருவதாக UNICEF வெளியிட்டுள்ள புதிய அறிக்கை எச்சரித்துள்ளது.

உலகளவில் சுமார் 1.8 பில்லியன் குழந்தைகள் வறட்சியினாலும், 1.2 பில்லியன் குழந்தைகள் கடுமையான வெப்ப அலையினாலும் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

662 மில்லியன் குழந்தைகள் வெப்பமண்டல புயல்களாலும், 337 மில்லியன் குழந்தைகள் ஆற்று வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்காவில் மட்டும் 1 பில்லியன் குழந்தைகள் மலேரியா ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.

கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும், பருவநிலை விபரீதங்களால் 85 நாடுகளில் 242 மில்லியன் குழந்தைகளின் கல்வி தடைப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் உலகளாவிய வானிலையை மாற்றி அமைக்கும் 'சுப்பர் எல் நினோ' தாக்கம் வரவிருக்கும் மாதங்களில் உணவு உற்பத்தியை அச்சுறுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இருப்பினும், கடந்த ஆண்டுகளில் உலகளவில் அரிசி மற்றும் இதர தானியங்கள் சாதனை அளவில் அறுவடை செய்யப்பட்டு சேமிப்பில் உள்ளதால், உணவுப் பற்றாக்குறை ஆபத்து சற்றுக் குறைந்துள்ளதாக ஐநாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes