General07 July 2026

காலாவதியான சர்க்கரையை பொதி செய்து மதுபான உற்பத்திக்கு விற்ற கும்பல் கைது!

காலாவதியான மற்றும் தகுதியற்ற சர்க்கரையை மீண்டும் பொதி செய்து, சந்தையில் , சட்டவிரோதமாக மதுபான உற்பத்திக்கு விற்பனை செய்து வந்த ஒரு பெரிய அளவிலான மோசடிக் கும்பலை வலான மத்திய ஊழல் தடுப்புப் பணிக்குழுவும் நுகர்வோர் விவகார அதிகார சபையும் வெற்றிகரமாக முறியடித்து, அதன் மேலாளரையும் கைது செய்துள்ளது.

இராணுவப் படைக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அதிகாரிகளும் நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளும் இந்தச் சோதனையை முன்னெடுத்தனர்.

இதன்போது சேமித்து வைக்கப்பட்டிருந்த காலாவதியான சர்க்கரையானது, காலாவதி திகதி மற்றும் வர்த்தகப் பெயரினை மாற்றி புதிதாக பொதி செய்யப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சோதனையைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளால் சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையம் சட்டப் பூர்வமாக மூடப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes