General07 July 2026

பிறக்கும் போதே 1,000 டொலர் முதலீடு - ட்ரம்ப் அறிமுகப்படுத்திய அதிரடி திட்டம்!

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில், 'ட்ரம்ப் கணக்குகள்' (Trump Accounts) என்ற புதிய திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 5 இலட்சத்திற்கும் அதிகமான கணக்குகளில் தலா 1,000 டொலர்களை அரசாங்கம் வைப்பு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திலிருந்து நியூயோர்க் பங்குச்சந்தை மற்றும் நாஸ்டாக் (Nasdaq) ஆகியவற்றின் தலைவர்களுடன் இணைந்து ட்ரம்ப் இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

2025ஆம் ஆண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரை பிறக்கும் அமெரிக்க குழந்தைகளுக்கு நீண்ட கால முதலீடு மற்றும் நிதி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்ததிட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியானது, நீண்ட கால வளர்ச்சியை இலக்காகக் கொண்ட குறைந்த கட்டண இண்டெக்ஸ் ஃபண்டுகளில் (Index Funds) தானாகவே முதலீடு செய்யப்படும்.

இந்த கணக்குகளைக் கொண்ட குழந்தைகள் 18 வயதை எட்டும்போது, ​​அவர்கள் இந்த நிதியை திரும்பப் பெறலாம் அல்லது தொடர்ந்து முதலீடு செய்யலாம்.

அத்துடன், பல முன்னணி அமெரிக்க நிறுவனங்களும் இந்த திட்டத்திற்கு தங்களது கூடுதல் நிதியுதவிகளை வழங்க முன்வந்துள்ளன.

எதிர்வரும் நவம்பர் மாத இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்காவில் வாழ்க்கை செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த திட்டம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள குடியரசுக் கட்சி செனட்டர் டெட் க்ரூஸ், இதன் மூலம் அமெரிக்காவின் ஒவ்வொரு குழந்தையும் நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளைக் கொண்ட உரிமையாளர்களாக மாறுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes