General19 July 2026

டெங்கு பாதிப்பு: பெண்கள் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தல்

டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பெண்கள் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தற்போது பதிவாகும் டெங்கு மரணங்களில் சுமார் 70 சதவீதமானோர் பெண்கள் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கரா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பதிவான டெங்கு நோயாளிகளில் 88 சதவீதமானோர், டெங்கு வைரஸின் இரண்டாம் வகையால் பாதிக்கப்பட்டிருந்தனர் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes